Chennai

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 16, 2025

கிரிக்கெட் போட்டியில் கிளீன் போல்ட் ஆன மேயர் பிரியா

image

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுகவில் உள்ள 22 அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் போட்டியான இன்று மேயர்கள் அணியின் கேப்டன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கிளீன் போல்ட் ஆனார். கிளீன் போல்ட் ஆகிவிட்டு நோ பால் கேட்டு அடம்பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

News February 16, 2025

சிரிக்கோ உதயாவின் மகள் கண்ணீர் மல்க பேச்சு

image

சர்க்கரை நோயால், நடிகர் சிரிக்கோ உதயாவின் இடது கால் வெட்டி அகற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய அவரது மூத்த மகள், “அப்பா இப்போ நல்லா இருக்காங்க, சீக்கிரம் வீடு திரும்பனும்னு எல்லோரும் வேண்டிக்க கேட்கிறேன். இதுவரை சினிமா துறையில் உள்ளவர்களிடம் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்கவில்லை. உதவி கேட்டு தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை. அவர் சீக்கிரமே பூரண குணமடைய வேண்டும்” என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

News February 16, 2025

காலை இழந்த நடிகர் சிரிக்கோ உதயா 

image

நடிகர் சந்தானத்திற்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிய நகைச்சுவை நடிகர் ‘சிரிக்கோ உதயா’ நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டது. திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கும் இவர், சிறந்த வயலின் இசைக்கலைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.

News February 16, 2025

கடலூரில் விபத்து: சென்னையை சேர்ந்த 2 பேர் பலி

image

பாடி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாத் (36). இவர், தனது நண்பர்களான பள்ளிக்கரணை பிரபாகரன் (36), மதுரவாயல் உதய பாஸ்கர் (38), தரமணி ஜீவன்ராஜ் (20), ஆதம்பாக்கம் அப்துல் ஹக்கீம் (35) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். இவர்களது கார், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் அருகே நேற்று (பிப்.15) இரவு 12.45 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சபரிநாத், பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத <>சம்பளம் <<>>வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News February 16, 2025

மக்கள் சாலை மறியல்: MLA பேச்சுவார்த்தை 2/2

image

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் MLA கே.பி.சங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News February 16, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது: ஒருவர் பலி 1/2

image

மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 16, 2025

3 பேர் கொலை வழக்கில் 7 பேர் கைது

image

புதுச்சேரியைச் சேர்ந்த ரஷி (20), அவரது நண்பர் தேவா (21), ஆதித்யா (20) ஆகியோர் நேற்று முன்தினம் (பிப்.14) பாழடைந்த வீட்டில் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், முன்விரோதம் காரணமாக சத்யா என்பவர் தனது கூட்டாளிகளுடன் கொலை செய்தது தெரியவந்தது. 3 தனிப்படையினர் சென்னை அருகே பதுங்கியிருந்த சத்யா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (15.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!