India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக குடிநீர் விநியோகம் பல இடங்களில் நிறுத்தப்பட உள்ளது. சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், தி.நகர், இராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 04.03.2025 காலை 10.00 மணி முதல் 05.03.2025 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக இன்று இரவு 8:05, 8:40, 11:05, 11:30, 11:59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் (40569), (40571), (40089), (40091), (40093) எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என சென்னை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில், கொலை செய்துவிட்டு ரீல்ஸ் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரை சேர்ந்த ராபர்ட் என்பவரை கொலை செய்த கும்பல், அதை ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணை கொல்ல முயன்ற போது அக்கம் பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், கொலை குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், நேற்று (பிப்.27) சுமார் 4,000 பேர் உறுப்பினர்களாக கொண்ட தமிழ்நாடு அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க வழக்கறிஞர் கீ.சுகுமார் ஏற்பாட்டில், சங்கத்தின் தலைவர் ஜானகிராமன் மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
பிரபல பாடகர் யேசுதாஸ் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இன்று (பிப்.27) காலை ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவித்தார். இது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தை நீக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத் தொடர், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் இன்று (பிப்.27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேள்வி நேரத்தின்போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், “சென்னை மாநகராட்சிக்கு எவ்வளவு கடன் உள்ளது? என கேள்வி எழுப்பினார். அதற்கு, “ரூ.3,065.65 கோடி கடனில் சென்னை மாநகராட்சி உள்ளது” என மேயர் பிரியா பதிலளித்தார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின் கீழ், தெருநாய்கள் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோசிப் மற்றும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி நேற்று (பிப்.26) தொடங்கியது. முதல்கட்டமாக 3,500 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் மூலம் தெருநாய்கள் மற்றும் மாடுகளை கண்காணித்து முறையாக பராமரிப்பு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது, அதிமுக சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (27). ரவுடியான இவர் நேற்று (பிப்.26) மாலை தெருவில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் ராபர்ட்டை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராபர்ட்டை கொலை செய்வதற்கு முன்பு, அயனவரத்தில் ரேவதி என்ற பெண்ணை அந்த கும்பல் தலையில் வெட்டியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.