Chennai

News March 8, 2025

ரயில்கள் ரத்து – 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (மார்ச்.9) காலை முதல் மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தாம்பரம் – பிராட்வே 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் – பிராட்வே 20 பேருந்துகள், பல்லாவரம் – செங்கல்பட்டு 5 பேருந்துகள் என 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க. 

News March 8, 2025

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கினார் முதல்வர் 

image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்.8) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 100 மகளிர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 8, 2025

மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி பெண்கள் பயணம்

image

‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி பெண்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்துள்ளனர். தினம்தோறும் பேருந்துகளில் 12.07 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தினம்தோறும் 1,654 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவிகள் தேவைக்காக தினந்தோறும் 210 தனி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News March 8, 2025

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மக்கள் எதிர்பார்ப்பு

image

சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட், வரும் மார்ச் 19ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் பிரியா தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில், மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து மேம்பாடு, புதிய மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் திட்டங்கள் மற்றும் மாநகராட்சியை அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற இடம்பெறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது​.

News March 8, 2025

சென்னை மாநகராட்சி 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

image

சென்னை மாநகராட்சி, வரும் 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. நடப்பாண்டு பட்ஜெட் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, மக்களின் தேவைகள், சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 8, 2025

11 மணி நேரம் மின்சார ரயில் சேவை ரத்து

image

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணிகள், நாளை (மார்ச் 9) நடக்க உள்ளன. இதனால், கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பயணியர் வசதிக்காக தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்புகள்

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

கிண்டியில் வேலைவாய்ப்பு

image

சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகத்தில், வேதியியலாளர், ஆய்வக நுட்பறிஞர், ஆய்வக உதவியாளர் என 36 காலிப் பணியிடங்கள் உள்ளன. ரூ.8,500 முதல் ரூ.21,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை cwadph.chn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!