Chennai

News June 20, 2024

சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை

image

சென்னையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தொடங்கிய மழை, மெல்ல மெல்ல அதிகரித்து இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. அண்ணாநகர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, வடபழனி, வள்ளுவர் கோட்டம், கிண்டி, வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர்.

News June 19, 2024

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னையில் வேலைவாய்ப்பு (ம) தொழில் வழிகாட்டும் மையங்கள் சார்பில் கிண்டியில் வரும் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 19, 2024

Way2News நிறுவனத்தில் பணி செய்ய விருப்பமா?

image

Way2News செய்தி அப்ளிகேஷனை சந்தைப்படுத்த மேலாளர்கள் தேவை. சென்னையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவமிக்கவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பயனாளர்களை Way2News பயன்படுத்த வைக்கும் திறமையாளர்களுக்கு முன்னுரிமை உண்டு. எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்பினால், உங்கள் Resumeஐ balaswamy@way2news.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

News June 19, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘லூலூ மால்’

image

‘லூலூ மால்’ நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பிரிவான ‘லூலூ ஹைபர் மார்கெட்’, சென்னையில் தொடங்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்ட்ரல், ஷெனாய் நகர், விம்கோ நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலூ ஹைபர் மார்க்கெட் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, மெட்ரோவின் ஒப்பந்த நிறுவனமான ‘கிரேஸ் சர்வீஸ்’ தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

News June 19, 2024

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே. நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் உள்பட பல இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News June 19, 2024

சென்னையில் 2ஆவது நாளாக பாதிப்பு

image

சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, 2ஆவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 12 விமானங்கள் தரையிறங்குவதிலும் 14 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நேற்று இரவு 10.30 மணி வரை திருவொற்றியூரில் 85 மி.மீ., அமைந்தகரை- 65 மி.மீ., தேனாம்பேட்டை- 62 மி.மீ., மணலி 60 மி.மீ., கொளத்தூர்- 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் நீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

News June 18, 2024

சென்னையில் கனமழை

image

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று இரவு 9 மணியளவில் இருந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, நந்தனம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு, தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்ல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

இதுவரை ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தியும் காயப்படுத்தியும் வருகின்றன. இதனைத் தடுக்க மாநகராட்சி அந்த மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 1117 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.43.05 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

சென்னையில் நாளை இங்கு மின்தடை

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நாளை(19.6.24) பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 18, 2024

விமானம் புறப்படும் நேரம் மாற்றம்

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் இன்று இரவு 11 மணிக்கு துபாய் புறப்படும் என அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் விமானம் புறப்பாடு தாமதமானது. இதனால் விமானப் பயணிகள் 15 மணி நேரத்திற்கு மேல் உரிய வசதிகளின்றி காத்திருக்கப்பட்டிருப்பதால், அவதி அடைந்து வருகின்றனர்.

error: Content is protected !!