India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற சர்வமங்களா தேவி உடனமர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க சிறந்த தலமாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பயன்பெறுங்க, தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
தெரு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா (61) என்பவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்குப்பிறகு இன்று உயிரிழந்தார். அவரை கடித்த நாய், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடி பட்டவரும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள்.
அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்த மோசஸ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அப்பெண் விலகியிருக்கிறார். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து பெண்ணின் உறவினருக்கு அனுப்பியதோடு, அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதால் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை பாரிமுனை உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதி வந்து வழிபட்டால் ஐந்தாவது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரூபனை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரூபன் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர். இவர் மீது 3 கொலை உட்பட 11 வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
முகப்பேரைச் சேர்ந்தவர் தனுஷ் (21), இவர் தனது பைக்கில் கலெக்டர் நகர் சாலையில் நேற்று (மார்.13) சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ரவி என்பவர் தனது மனைவி மோனிகாவுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். திடீரென 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், தனுசுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவி, மோனிகாவிற்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி, வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள், சமூக வலைதளங்களில் டிக்கெட் விற்பனை என வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) நடைபெற்றது. இதில், பால், பால் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், நுகர்வோருக்கு ஊட்ட சத்தையும் உறுதி செய்யும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால் பண்ணைகளில் நவீன பால் அளவிடும் கருவிகள், பால் தகவல் சேகரிப்பான், நிலைக்காட்டி ஆகியவை நிறுவப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும். மேலும், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், குறிப்பாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.