Chennai

News March 23, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (மார்.23) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (22.03.025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News March 22, 2025

சென்னையில் ஐபிஎல் போட்டி: போக்குவரத்து மாற்றம்

image

சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பார்க்கிங் இடங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்த முழுமையான வரைபடத்துடன் பொதுமக்கள் இடர்ப்பாடின்றி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்த மாற்றங்களை பின்பற்றுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.

News March 22, 2025

செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

image

எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறகிறது. இதனால், இன்று (மார்.22) மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதியம்1.45, 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

News March 22, 2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சென்னையில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. யூஸ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க. 

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

சென்னை கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

ரயிலில் கீழ் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு சலுகைகள்

image

முன்பதிவு ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கை பயணிகளுக்கு தனி உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இரவில் அந்த இருக்கையில் சம்பந்தப்பட்ட பயணியைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது. அதேபோல், தேவையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கீழ் இருக்கை பயணியை எழுப்புவது, தொந்தரவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

சென்னையில் பள்ளிகள் இயங்கும்

image

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இன்று (மார்.22) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் விடுமுறை என்று நினைத்து வீட்டிலேயே தூங்கி விடாதீர்கள். மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!