India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.24) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.
சென்னையை அடுத்து எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஓட்டுனர் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14). கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நெருங்கும் நிலையில் படித்து வந்த இவர் இவர் கடந்த சனிக்கிழமை ஈர கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இன்றைய இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்களை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் எனவும் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (14). அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (மார்.22) இரவு ஈரக்கையால் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பதறிய பெற்றோர், சிறுமியை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரக்கையால் சுவிட்ச் அல்லது செல்போனை சார்ஜ் போடாதீர்கள்.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (மார்.21), கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெண் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி இப்படி பிளான் போட்டு சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.