Chennai

News March 16, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

சென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள்: 1.மெரினா கடற்கரை, 2.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 3.வள்ளுவர்கோட்டம், 4.ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில், 5.எலியட்ஸ் கடற்கரை, 6.விஜிபி கோல்டன் பீச், 7.செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, 8.ஆயிரம் விளக்கு மசூதி, 9.கபாலீஸ்வரர் கோவில், 10.வடபழனி முருகன் கோவில். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2025

கடன் தொல்லை நீக்கும் திருவுடைநாதர்

image

வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில் உள்ளது. பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் தொல்லையால் அவதிப்படுவோர், திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் சிறந்து விளங்க இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2025

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! ஆட்டோ கால் டாக்ஸி ஓடாது!

image

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News March 16, 2025

ஒரே நாளில் 7 இடங்களில் மருத்துவ முகாம்

image

சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பா.சுப்ரமணியன், “கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் சென்னை முழுவதும் 7 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. காது, மூக்கு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 – 4 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்” என்றார்.

News March 16, 2025

ரூ.14,000 உதவித்தொகையுடன் ITI தொழில் பழகுநர் பயிற்சி

image

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI தொழில் பழகுநர் பயிற்சி (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electrician, Auto Electrician, Fitter, Turner, Painter & Welder) மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் அளிக்கப்படுகிறது. பயிற்சியை பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி காலை 10 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

மரம் வெட்டும்போது 2 பேர் பலி

image

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மரம் வெட்டும் பணியின்போது 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 16, 2025

மதியம் அடிதடி.. இரவில் கொலை 2/2

image

ராஜா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். அவர்கள், வாண்டு மணி, வெள்ளை ராகுல், விக்னேஷ் ஆகும். மணியின் கூட்டாளியான விஜய் என்பவரிடம் சம்பவத்தன்று மதியம் ராஜா தகராறில் ஈடுபட்டு விஜய்யை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, தனது கூட்டாளிகள் 2 பேருடன் அன்று மாலையே ராஜாவை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

News March 16, 2025

தேனாம்பேட்டை அருகே வெட்டிக்கொலை 1/2

image

வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜா நேற்று முன்தினம் (மார்.14) தேனாம்பேட்டை அருகே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜாவைச் சுற்றி வளைத்து வெட்டினர். கழுத்து, தலை பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாவை போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

News March 15, 2025

பேருந்துகளில் இலவச பயணம்- சிஎஸ்கே அதிரடிஅறிவிப்பு

image

சென்னை சேப்பாக்கத்தில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை போக்குவரத்து மாநகர பேருந்துகளில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!