Chennai

News March 17, 2025

எச்சரிக்கை: வரி செலுத்தாவிட்டால் குடிநீர் நிறுத்தம்!

image

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் வரும் மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வரியை செலுத்தத் தவறினால் குடிநீர் நிறுத்தம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 17, 2025

குடிநீர் கட்டணம் செலுத்த புதிய முறை அறிவிப்பு

image

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தற்போது குடிநீர் கட்டணம் செலுத்தும் புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login வலைதளத்தில் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் மற்றும் UPI மூலமாக பணம் செலுத்தலாம். இந்த அரையாண்டிற்கான உங்கள் வரி மற்றும் கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 31-03-2025 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 17, 2025

சென்னையில் இன்று பெட்ரோல், மற்றும் டீசல் விலை நிலவரம்

image

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று (மார்ச்.17) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.

News March 17, 2025

மின்சார பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் கைக்குழந்தை உயிரிழப்பு

image

மதுரவாயலில் மின்சார பைக்கிற்கு சார்ஜ் போட்ட போது தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.விடிய விடிய பைக்கிற்கு சார்ஜ் போடும் போது தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <>கிளிக் <<>>செய்யவும்.

News March 17, 2025

சிஎஸ்கே போட்டிக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

image

இந்தியாவில் 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், மார்ச் 23ல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும், போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

தீ பிடித்து எரிந்த மின்சார பைக்; மூவர் படுகாயம்

image

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த நடராஜன் தனது மின்சார பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று படுத்துள்ளார்.கீழ்தளத்தில் அவரின் மகன் கெளதம்,மருமகள் மஞ்சு, 9 மாத குழந்தை மூவரும் உறங்கி உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீ பிடித்து எரிந்து கீழ்தளம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 17, 2025

இரட்டை கொலை; இரத்த குளமாக மாறிய கோட்டூர்புரம்

image

சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 16, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

சென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள்: 1.மெரினா கடற்கரை, 2.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 3.வள்ளுவர்கோட்டம், 4.ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில், 5.எலியட்ஸ் கடற்கரை, 6.விஜிபி கோல்டன் பீச், 7.செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, 8.ஆயிரம் விளக்கு மசூதி, 9.கபாலீஸ்வரர் கோவில், 10.வடபழனி முருகன் கோவில். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2025

கடன் தொல்லை நீக்கும் திருவுடைநாதர்

image

வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில் உள்ளது. பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் தொல்லையால் அவதிப்படுவோர், திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் சிறந்து விளங்க இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!