India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெருநகரில் 170 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நகரங்களிலும் நாய் கருத்தடை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்.25) காலை 10.15 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்தன. பெரும்பாலானோர், தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
சென்னையில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 இடங்களில் செயின் பறிப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி MRC மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு, வேளச்சேரி டான்சி நகரில் 2 இடங்களில் செயின் பறிப்பு, திருவான்மியூர் இந்திரா நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு என காலை 6 முதல் 7 மணிக்குள் 15 சவரன் நகைக்குள் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான ஹார்ட் டிஸ்குகளை தனது மேனஜர் எடுத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனியில் உள்ள பெப்சி யூனியனில் புகார் அளித்ததோடு, கடந்த சில நாட்களாக அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக நேற்று (மார்.24) ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
1. கபாலீஸ்வரர் கோயில்- திருமயிலை, 2. மருந்தீஸ்வரர் கோயில்- திருவான்மியூர், 3. திருவல்லீஸ்வரர் கோயில்- திருவலிதாயம், 4.மாசிலாமணீஸ்வரர் கோயில்- திருமுல்லைவாயில், 5. தியாகராஜ சுவாமி கோயில்- திருவொற்றியூர், 6 .வேதபுரீஸ்வரர் கோயில்- திருவேற்காடு, 7. தேனுபுரீஸ்வரர் கோயில்- மாதம்பாக்கம். ஷேர் பண்ணுங்க.
சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.21% நீர் இருப்பு உள்ளதால், இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகருக்கு மாதம் தோறும் 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 8 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வது சீசனின் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. இதில் சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து, போட்டிக்கு 3 மணி நேரம் முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.