India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கான விருப்ப செல்போன் எண்கள் (பேன்சி நம்பர்) ஜூலை 13 வரை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசி எண்ணாக பேன்சி எண்களை பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை 4ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்.
வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை TN அரசு தொடங்கியுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு&ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் <
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
சென்னை, சாலைகள், நடைபாதைகள் மறையும் வகையில் சிலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக வரும் புகார்களின் பின்னணியில், சென்னை நகரில் பொதுஇடங்களில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2019ல் வருவாய் துறை வெளியிட்ட வழிகாட்டிகளை பின்பற்றி புதிய விதிமுறைகள் வரவிருக்கின்றன. அதிகாரிகள் இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.*சென்னை சாலைகளில் சிலை நிறுவப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?
தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 20 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (044-25268323)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>
▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் நேற்று வரை 1,002 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வருவோருக்கு கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார். *ரவுடிகளின் கூடாரமாக உள்ளதா சென்னை?*
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.