India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில், மாலை நேரத்தில் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும். அத்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை, புறநகரில் வசிக்கும் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, பேருந்து நிலையங்களுக்கு நேற்று படையெடுத்தனர். அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஆமைப் போல் நகர்ந்து சென்றன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, பொது இடத்தில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, கட்டடக் கழிவுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. வார நாட்களில் காலை 5:30 மணிக்கு தொடங்கும் இந்த சேவை, இன்று மற்றும் நாளை காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி நேரம் வரை இயக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளைக் கையாளுவது குறித்து சென்னை மாநகராட்சி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். மின்கம்பங்கள் மாறும் மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பட்டாசுக்கு அருகில் சென்று வெடிக்க கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், நேற்று மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் செம்மொழி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், கையடக்கக் கணினிகளை (Tab) வழங்கினார். 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிவிப்பின்படி, வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், காகிதமில்லா நடைமுறையினை செயல்படுத்துவதற்காகவும் Tab வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் பங்கேற்றனர்.
சென்னையில் 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 595 பூங்காக்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல், ரயில் சேவை தொடங்கியது. இதில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மட்டும், தற்காலிகமாக ரயில்கள் நிற்காது என ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 226-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.