India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் இன்று மாலை 6 மணியளவில் காலமானார். மனோஜூக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் அனைவரும் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு (1) துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் ஹரிகிரண் பிரசாத் மாற்றப்பட்டு, புதிய துணை ஆணையராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெகலீனா ஹைடன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பாடியில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோர் நேரில் வந்து சிவபெருமானை தரிசனம் செய்துள்ளனர். திருஞானசம்பந்தர் இக்கோயிலை போற்றி தேவாரத்தில் பாடியுள்ளார். இக்கோயிலுக்கு வந்தாலே பாவங்கள், சாபங்கள் நீங்கும் என்று பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை துறைமுகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் சென்றுள்ளார். அங்கு துறைமுக போக்குவரத்து உதவி கண்காணிப்பாளர் சத்ய சீனிவாசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், சத்ய சீனிவாசன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பெருநகரில் 170 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நகரங்களிலும் நாய் கருத்தடை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்.25) காலை 10.15 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்காக, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்தன. பெரும்பாலானோர், தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
சென்னையில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 இடங்களில் செயின் பறிப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி MRC மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு, வேளச்சேரி டான்சி நகரில் 2 இடங்களில் செயின் பறிப்பு, திருவான்மியூர் இந்திரா நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு என காலை 6 முதல் 7 மணிக்குள் 15 சவரன் நகைக்குள் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான ஹார்ட் டிஸ்குகளை தனது மேனஜர் எடுத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனியில் உள்ள பெப்சி யூனியனில் புகார் அளித்ததோடு, கடந்த சில நாட்களாக அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக நேற்று (மார்.24) ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.