Chennai

News February 23, 2026

சென்னையில் கொடூர கொலை; விசாரணையில் பகீர்!

image

புரசைவாக்கத்தில் தனியாக வசித்து வந்த பாலகிருஷ்ணன்(61) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவருடன் வேலை செய்யும் சக ஊழியரான பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவர் நகைக்காக கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 23, 2026

சென்னை அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட நபர்!

image

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (23). இவர் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் காரில் சென்ற போது ‘பிரேக்’-ஐ மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் எதிரே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சஞ்சய்யை மடக்கி பிடித்த மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

News February 23, 2026

சென்னையில் திகில் சம்பவம்!

image

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ருதி(35). இவரது கடைக்கு முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர், ஸ்ருதி என்பவருக்கு பார்சல் வந்திருப்பதாகக்கூறி காவலாளியிடம் கொடுத்து சென்றார். அதை பிரித்து பார்த்த போது மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு இருந்துள்ளது. புகாரின் பேரில் பழிவாங்க நினைத்து மண்டை ஓடு அனுப்பிய தினேஷ், ஜோசப், சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

News February 23, 2026

நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.

News February 23, 2026

நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.

News February 23, 2026

நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.

News February 23, 2026

நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.

News February 22, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

image

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News February 22, 2026

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) சென்னை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர்!

error: Content is protected !!