India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் இன்று இரவு சமையல் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுமன் பால், ராகேஷ், அரவிந்த், சிமந்த், சுராஜ், ஆண்டோ உள்ளிட்ட 7 நபர்கள் படுகாயமடைந்து உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யானை கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் உடல், அவரது ஆசைப்படியே மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு அவர், மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். நாளை மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படும்.

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

பீகாரை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் மன்கி (34),ஒடிசாவை சேர்ந்த தீபக் மஜி, ஜார்க்கண்டை சேர்ந்த பிஜல் மஹேடா ஆகியோர் அக்கரை, கெனால் சாலையில் உள்ள கண்டெய்னர் ரூமில் மது அருந்தினர். அப்போது, தீபக் மது பாட்டிலை தட்டிவிட்டதால் சத்தியேந்திரகுமார் தீட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் மஜீ, அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். புகாரின் பேரில் தீபக் மஜியை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.