Chengalpattu

News February 25, 2025

தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

image

செங்கல்பட்டு திருக்கச்சூரில் அமைந்திருக்கும் அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 259வது தேவராத்தலமாகும்.இங்கு அர்ச்சனை செய்தால் தீராத நோய்கள், துன்பங்கள், கிரஹ தோஷங்கள், கண் நோய்கள் தீரும்.சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி அபிஷேகம் செய்து வழிபடலாம். சிவராத்திரிக்கு இந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அருளை பெறுங்கள்.

News February 25, 2025

பழங்குடியினர் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி

image

செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை, செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாகக் கொண்டு, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியினர் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், இன்று (பிப்.25) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. தகுதியுள்ளவர்கள் ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் போதும் சூப்பர் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

குறைதீர் கூட்டத்தில் 497 மனுக்கள்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் உதவி ஆணையர் கலால் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

News February 25, 2025

த.வெ.க., கட்சி தலைவர் விஜய் வருகை; பிரமாண்ட பேனர்கள் 

image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி பகுதியில் நாளை பிப். 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய்யை வரவேற்கும் விதமாக த.வெ.க., கட்சியினர் சுமார் 80 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனர் அமைத்துள்ளனர்.

News February 25, 2025

தறிகெட்டு ஓடிய பைக் மோதி காவலாளி பலி

image

நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (39) மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். மறைமலைநகர் நகராட்சி எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்ற நிலையில், அதிவேகமாக வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், பைக்கில் வந்த ஷர்மா (23), ஆதித்யன் (22) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

News February 24, 2025

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய பள்ளி மாணவி 

image

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் இள்ளலூர் அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கும் மாணவி வ.சரண்யா என்பவர் ஒன்றிய அரசு கல்வி தொகை தர மறுப்பதால் தன்னுடை மேல் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 12,000 தொகையை இன்று (பிப்.24) மானம்பதி மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எல்.இதயவர்மன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

நடுக்கடலில் மயங்கிய மீனவர் பலி

image

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(48), மீனவர்கள் சிலருடன் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலில் ஏற்பட்ட வெப்ப சீதோஷ்ண நிலைக்கு உடல் ஒத்துழைக்காததால் திடீரென படகில் மயங்கி விழுந்தார். பதறி போன சக மீனவர்கள் வேக வேகமாக கரை திரும்பி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமான உயிரிழந்தார். இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த <>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!