Chengalpattu

News February 28, 2026

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் உள்ள 349 வாகனங்களை பகிரங்க ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கரணையில் மார்ச் 4ம் தேதி, சேலையூரில் மார்ச் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். பள்ளிக்கரணையில் மார்ச் 2ம் தேதி, சேலையூரில் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News February 28, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவர், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள சந்த்ராஜ் பெருமாள் கோவிலில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார். வேலை செய்துகொண்டிருந்த போது சாரத்தில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 28, 2026

செங்கை: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்

image

பல்லாவரம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் 44 இவருக்கு நிர்மலா 40 என்பவருடன் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு கோபிநாதன், நிர்மலாவை ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து கை கால்களை வெட்டி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில் கோபிநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோபிநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

செங்கல்பட்டு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் ▶️விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

விவாகரத்து கேட்டு விஜய் மனைவி சங்கீதா மனு

image

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் கடந்த பிப்.24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News February 27, 2026

செங்கை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

செங்கை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

செங்கை: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

image

செங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

செங்கல்பட்டு: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News February 27, 2026

தாம்பரம் கடற்கரை இடையே 20 விரைவு மின்சார ரயில் இயக்கம்

image

எழும்பூரில் நடைபெற்ற வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் சிரமத்தை குறைக்க தாம்பரம் – கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் கிண்டி, மாம்பலம் (ம) எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!