Chengalpattu

News February 28, 2025

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

image

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே செங்கல்பட்டு மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.

News February 27, 2025

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரபலமான வேதகிரீஸ்வரர் கோயில் 160 மீட்டர் உயரம் கொண்ட வேதகிரி மலையின் மேல் அமைந்துள்ளது. கோயிலுக்கு தினமும் பகல் நேரத்தில் இரண்டு கழுகுகள் வந்து சென்றது அங்கு ஒரு அரிய நிகழ்வு. நகரின் தென்மேற்கு முனையில் நீர்தொட்டி சிகிச்சைமிக்கதாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலட்ச தீப நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் சிப்பிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

News February 27, 2025

செல்வத்தை அள்ளித்தரும் அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவில். திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிப்பட்டு திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம்.இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது நம்பிக்கை. தினந்தோறும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தை தரிசித்தால் குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

News February 27, 2025

செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பள்ளி மாணவி அசத்தல்

image

செங்கல்பட்டு சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவி நித்யா, 25 வயதுக்கும் குறைவான பிரிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார். இவருக்கு சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர், மாநில போட்டிக்கு தேர்வானார்.

News February 27, 2025

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது

image

திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது, அதிமுக சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

100 CCTV கேமராக்களை ஆய்வு செய்து கைது

image

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து பல்லாவரம் பம்மல் பகுதியைச் சதாம் உசேன், சுரேஷ், பரிபாய்தீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 26, 2025

பத்திரிக்கையாளர்கள், பவுன்சர்கள் இடையே வாக்குவாதம்

image

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெற்று வருகிறது. விழா அரங்கிற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவன் நிலைகுலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

News February 26, 2025

விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு

image

நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 25, 2025

மயங்கி விழுந்து மூச்சு திணறி இளைஞர் பலி

image

செங்கல்பட்டு அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியிலுள்ள மெக்கானிக் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் காலை பணிக்கு செல்வதற்காக இவர் மேற்கண்ட பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டு ஜி.எஸ்.டி., சாலையோரம் மூடப்படாத கால்வாயில் இருந்த கழிவு நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!