Chengalpattu

News March 1, 2025

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை

image

கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், புவனேஸ்வரி அம்மன் நகர் MGR தெருவில் கமலஹாசன் (35) – ரம்யா (32) தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணமான 8 மாதத்தில், 4 மாத கர்ப்பிணியான ரம்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மமான முறையில் நேற்று (பிப்.28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2025

குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News March 1, 2025

செங்கல்பட்டு புத்தகத்திருவிழா நிறைவு

image

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. காசி அலிசன் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 20ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்புரையாற்றினர். இந்த புத்தகத்திருவிழா நேற்றுடன் (பிப்.28) நிறைவுபெற்றது.

News March 1, 2025

விழிப்புடன் இருப்போம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் தினமும் பல்வேறு வகையில் பணமோசடிகள் அரங்கேறி வருகிறது. காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தான் வந்து கொண்டு இருக்கின்றனர். “மோசடிகள் பல வழிகளில் நடைபெறுகின்றன. எனவே, நாம் விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருப்போம்” என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். ஷேர் செய்யுங்கள்

News March 1, 2025

ஹோட்டல் மாஸ்டர் பணியின்போது உயிரிழப்பு 

image

செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர், கருங்குழி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று (பிப்.28) காலை பணியின்போது திடிரென மயங்கி உள்ளார். சக பணியாளர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 28, 2025

செங்கையில் கனிமங்கள் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி குத்தகைதாரர்கள் கனிமங்களை எடுத்துச் செல்ல, ‘இ-பெர்மிட்’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 25ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பணியால், அனுமதி சீட்டுகள் விரைவாக கிடைக்கும். விதிகள் பின்பற்றப்படாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார். 

News February 28, 2025

நினைத்ததை நிறைவேற்றும் சாய் விபூதி பாபா

image

சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் பகுதியில், எம்.சி. நகர் உள்ளது. அங்கு வெங்கட்ராமன் நகரில் முதல் மெயின் ரோட்டில் சாய் விபூதி பாபா ஆலயம் உள்ளது. இக்கோவிலில், எங்கும் நடக்காத அதிசயமாக அடிக்கடி விபூதி தானாகவே கொட்டுகிறதாம். மேலும், இங்கு தினமும் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வியாழன் அன்று கூடுதல் சிறப்பு. நினைத்ததை நிறைவேற்றும் பாபாவாக மக்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் திறப்பு

image

மீனம்பாக்கம் விமான நிலையத்தில், மத்திய அரசின் ‘உடான் யாத்ரி கபே’ திட்டத்தின் மூலம் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, நேற்று (பிப்.27) இத்திட்டத்தை பயணிகளுக்காக தொடங்கி வைத்தார். இதில், காபி, டீ – ரூ.10, தண்ணீர் பாட்டில் – ரூ.10, சமோசா ரூ.20, ஸ்வீட் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க <<>>

News February 28, 2025

நிர்வாகி மீது தாக்குதல்: அதிமுக சார்பில் போராட்டம்

image

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமாரை கடந்த 25ஆம் தேதி வினோத், அப்பு உள்ளிட்டோர் பயங்கர ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசார் ஜெயக்குமார் உள்ளிட்ட 50 பேரை குண்டு கட்டாக கைது செய்தனர்.

error: Content is protected !!