India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 52 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றுக்குள் (மார்.3) இந்த <
செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில்.இங்கு கல்வியில் சிறக்க வேண்டி வீராசன தட்சிணாமூர்த்தி இடம் வேண்டிக் கொள்ளப்படுகிறது. வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை நிறைவேறினால் சாமிக்கு வஸ்திரம் அணிவித்து விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.இரவு இல்லாத சரபேஸ்வரர் இங்கு அருள் பாலிக்கிறார்.தேர்வு எழுதிக் கொள்ளும் மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் நன்மை பயக்கும்.
செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், 15 வயது சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பாலாத்காரம் செய்த அரவிந்த் (24) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.2019 நடந்த இந்த சம்பவத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.நீதிபதி நசீமா பானு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் ₹3,000 அபராதம் விதித்தார். சிறுமிக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 52 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <
செங்கல்பட்டு மாவட்டத்தில் 88,328 மாணவர்கள் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். 274 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,4 மையங்கள் தனித் தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 123 பறக்கும் படைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன. போக்குவரத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில், 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 141 என மொத்தம் 239 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பிளஸ் 2 பயிலும் 14,861 மாணவியர், 13,091 மாணவர்கள் என, மொத்தம் 27,952 பேர், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 வகுப்பு பயிலும் 15,722 மாணவியர், 14,146 மாணவர்கள் என, மொத்தம் 29,868 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ALL THE BEST.
பெருங்களத்தூர் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா, பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முந்தினம் (பிப்.28) இவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஷ்வாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோஷ்வா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் இந்த கோயிலுக்கு பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியா பத்துமலை முருகனும் காட்சி அளிக்கிறார். இங்கு குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்யப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி கனவில் தோன்றிய முருகன், இங்கு கோவில் எழுப்ப வேண்டும் என்று சொன்னதன் அடிப்படையில் மலை உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்ய தொடங்கினர்.
பெருங்களத்தூர் வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர், பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஷ்வாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோஷ்வா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.