India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை, பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து பேசினார். அமைச்சர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பானது, மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்ததால், அவரை அழைத்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு, மாவட்டத்தில் உள்ள 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் மருத்துவமனை, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்தால் இந்த பாதிப்பு குணமாகிவிடும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் மருத்துவமனைக்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மழைக்கால காய்ச்சல் சிறப்பு முகாம், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க
குரோம்பேட்டையைச் சேர்ந்த அமுதன் தனது மனைவியுடன் இன்று மாலை பல்லாவரம் சாலையில் ஓட்டலில் உணவு அருந்த பைக்கில் சென்றபோது, விசுவதாஸ் (70) என்பவர் மீது பைக் உரசியது. இதில் முதியவரின் மகன் மகேந்திரன் (38) அமுதனுடன் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாய் தகராறு முற்றி, மகேந்திரன், அமுதன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திருத்தம் 2025 – தேர்தல் மேற்பார்வையாளர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கினார்.
தாம்பரம் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் நாளை (நவ.17) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகளின் வசதிக்காக அரை மணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் காலை 6.15 மணி முதல் மாலை 4.10 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட மரபு மற்றும் நவீன கலைகள் சிறந்து விளங்குகின்றன. அக்கலைஞர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் போட்டி நடத்தி சிறந்த கலைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்குகிறது. இத்துறை, 2024 – 25 மாநில அளவிலான கண்காட்சி நடத்த உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்.
18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.