India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்லாவரம் பகுதியில் நேற்றிரவு மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீர் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மருத்துவமனை ஆய்வுக்கு பிறகு தான் அது உறுதியாகும். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.
பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடிநீரில், கழிவுநீர் கலந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஏரியில் பிடித்த மீனை சாப்பிட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக பல்லாவரம் பகுதியில் வாந்தி, மயக்கம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்றனர்.
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதில் 23பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி 12வது வார்டு காமராஜர் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாமல் குடித்த அப்பகுதி மக்கள் வாந்தி, மயக்கமடைந்து 20க்கு மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஏற்கனவே திரிவேதி, வரலட்சுமி ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (டிச.5) காலை மோகனரங்கன் (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெரும்பாக்கம் ஏரியில் கொட்டப்படுவதாக, செங்கல்பட்டை சேர்ந்த வெங்கடேசன் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் யார் கொட்டியது என்பதை கண்டறிந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், செங்கல்பட்டு கலெக்டர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஊராட்சி ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் சிறுபான்மையான இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் தலைமையில், இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் மாவட்ட தலைவர்கள் வேத சுப்பிரமணியம், மோகனராஜா உள்ளிட்ட பலர் கைதாகினர்.
பாஜக பிரசார பிரிவு தலைவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் முதல்வர், துணை முதல்வர், பெரியார் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து சதீஷை நேற்று (டிச.3) காலை கைது செய்து பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டை சேர்ந்தவர் குருசாமி என்பவரின் மகன் ராகுல் (20) பிஎஸ்சி படித்துள்ளார். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாக தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராகுல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.