India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (23). இவர், மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் உணவு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடித்து அறைக்கு சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து செல்போன் பறிக்க முயற்சித்தது. அப்போது, மகேந்திர குமார் கூச்சலிட்டதால், அருகில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்குள் அந்த கும்பல் மகேந்திர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
அந்தமான் கடலில் இன்று (டிச.14) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது வலுபெற்று நாளை (டிச.15) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக டிச.16 – டிச.18 வரை சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
லோன் தருவதாக கோரி பலர் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தங்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு லோன் தருவதாக கூறி வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
தினம் தினம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் OTP குறித்து யாரிடமும் பேச வேண்டாம், தேவையற்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம் என செங்கல்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், மதுராந்தகம், கருங்குழி, செய்யூர், அரசூர், திருக்கழுக்குன்றம், மணப்பாக்கம், திருப்போரூர், நெல்லிகுப்பம், வண்டலூர், பொன்மார் ஆகிய இடங்களில் ரேஷன் கார்டு திருத்தும் தொடர்பாக சிறப்பு முகாம் நாளை (டிச.14) நடக்கிறது. இதில், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்றுபோல் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
பிறந்த நாளன்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் குற்றவாளிகள் ஏராளமானோர் போதை பொருள் பயன்படுத்துவதால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கை ஒரு அழகான பயணம். போதை பழக்கத்தால் அதை அழிக்க வேண்டாம் என செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், அரசு உறுதிமொழிக் குழு கூட்டம், அதன் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தலைமையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், மாமல்லபுரம் கோவில் சுற்றுச்சுவர் புனரமைக்கும் பணி, மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா ஆய்வு செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, தரமணி, மேடவாக்கம், தாம்பரம், ஆதம்பாக்கம், சிட்லபாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், கிளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.