Chengalpattu

News January 4, 2025

பிளாஸ்டிக்கை உண்ணும் மான்கள்

image

ஊரப்பாக்கம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த வனத்தை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தை ஒட்டி கொட்டுகின்றனர். இதனால் வனத்திலிருந்து வெளியே வரும் மான்கள், பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றனர். இதனால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க, பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 4, 2025

HIGH BEAM LIGHT-யை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

image

தேவையற்ற தருணங்களில் வாகனங்களில் உள்ள ஹைபீம் விளக்குகளை (HIGH BEAM LIGHT) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இதனை கடைபிடிக்கவும், விபத்து இல்லாமல் பயணம் மேற்கொள்ளவும், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க

News January 4, 2025

கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் அளிக்கிறது. இதில், 18- 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் இல்லை. இன்று காலை 9.30 முதல் மாலை 3 வரை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் உள்ள தரைத்தளம் ஜி.டி.பி. ஹாலில் நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்கலாம்.

News January 4, 2025

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 4, 5,10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து குமரிக்கு 13ஆம் தேதியும், ராமநாதபுரத்திற்கு 11,13,18 ஆகிய தேதிகளிலும், நெல்லைக்கு 13,20,27 ஆகிய தேதிகளிலும், நாகர்கோவிலுக்கு 12,19 ஆகிய தேதிகளிலும் புறப்படும். ஷேர் பண்ணுங்க

News January 4, 2025

செங்கல்பட்டில் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரருக்கு நிதியுதவி

image

செங்கல்பட்டு ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் லோகேஸ்வரன் தேசிய அளவில் டெல்லியில் நடக்கும் சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பசித்தவருக்கு உணவு வழங்கும் குழு சார்பாக ரூ.2,500 மதிப்புள்ள ஹெல்மெட்டும் மற்றும் அவருடைய போக்குவரத்து செலவுக்காக ரூ.7,500 வழங்கப்பட்டது.

News January 3, 2025

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து மாலை 5.35 மணிக்கு  தாம்பரத்திற்கு இயக்கப்படும். இந்த ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News January 3, 2025

இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி

image

செங்கல்பட்டு மாவட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் நாளை (ஜன.4) காலை 9.30 – 3 மணி வரை மாவட்ட அலுவலகத்தின் தரை தளம் ஜிடிபி ஹாலில் நடைபெறும் இளைஞர் திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

News January 3, 2025

4ஆம் தேதி மிதிவண்டி போட்டி: கலெக்டர் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடக்கிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டி காலை 7 மணிக்கு, திருப்போரூர் கூட்டுச்சாலையில் தொடங்கப்பட உள்ளன. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோயை எப்படி தடுக்கலாம்

image

▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்ன ஆகும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!