India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற தஸ்வந்த் ஜாமினில் வெளி வந்து தாயை கொன்ற சம்பவம் 2017ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இன்று தாயை கொன்ற வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 9445000414, 9445000415, 9384094738, 9445000500, 9384094642, 9445000501, 9445000503 ,9445000504 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க்கலாம் . பணிக்கு செல்லும் உங்க பெண் தோழிகளுக்கு ஷேர் பண்ணி சேவ் பண்ணி வச்சிக்க சொல்லுங்க
▶️தேவி கருமாரியம்மன் கோயில், திருவடிசூலம்
▶️குளந்தியம்மன் அம்மன் கோயில், செங்கல்பட்டு,
▶️ஸ்ரீ வேம்பாடி அம்மன் கோயில், முட்டுக்காடு,
▶️அழகி அம்மன் கோயில் தெற்கில் காவித்தண்டலம்(உத்திரமேரூர் அருகில்),
▶️திருப்புராசுந்தரி அம்மன் கோயில், திருக்கழுக்குன்றம்,
▶️அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், அச்சரப்பாக்கம்,
▶️காமாட்சி அம்மன் கோயில், மாமல்லபுரம்.
நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி,(70) பயணம் செய்தார். ரயில் பேசின்பாலம், அருகே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த, 6 கிராம் தங்க செயினை, மர்ம நபர் பறித்து தப்பினார். சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் அடிப்படையில், வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்த குமரேசன் 30, என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து முதல் முறையாக பீச் ஸ்டேஷன் வரை புறநகர் ஏசி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் இந்த ரயிலில் அமர்ந்தும், நின்றும் 5,700 பேர் பயணிப்பதற்கான இட வசதி உள்ளது. குறைந்த பட்சம் ரூ.35 முதல் அதிகபட்சம் ரூ.105 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்காக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து நாளை(ஏப்.29) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
மறைமலை நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா (60). விவசாயியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் மற்றும் பின் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் இவர் தனது வயலில் நீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யூர் எம்.எல்.ஏ., பனையூர் பாபுவுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ச.அருண்ராஜ் (044-27427412), மாவட்ட எஸ்.பி- சாய் பிரணீத்(044-29540555), மாவட்ட வன அலுவலர்- ரவி மீனா( 044-27236500), மாவட்ட வருவாய் அலுவலர்- கணேஷ்குமார்(044-27427413), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர்- நாராயண சர்மா(044-71116862), வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு- மாலதி ஹெலன்(044-27426492), வ.கோ, தாம்பரம்- முரளி( 044-22410050). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு: இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிமவள நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அறிவுறுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.