India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு இன்று (ஜூலை.5) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. காவலர்கள் இன்றைய 10 மணி முதல் காலை 6 மணி வரை வந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த சமயத்தில் ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருக்கவும்.
செங்கல்பட்டில் ஜூலை 7 அன்று சுப முகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்படும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். அன்று ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 100-ல் இருந்து 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-ல் இருந்து 300 டோக்கன்களும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய முடியும்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 72 வி.ஏ.ஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில் உள்ள,கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாற்றம் செய்து சப்- கலெக்டர் மாலதி எலன் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாவை சேர்ந்த கிராம அலுவலர்கள்,பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது வல்லம் காளத்தீஸ்வரர் கோயில். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட குடவரைக் கோயில். ராகுவும், கேதுவும் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை வழிபட்ட பிறகு, இங்கு ஒரு இரவு தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். ராகு-கேது தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடைகள் நீங்க இங்குள்ள காளத்தீஸ்வரரையும், ஞானாம்பிகை அம்மனையும் வணங்கி வேண்டிக்கொள்வது வழக்கம். ஷேர் பண்ணுங்க
நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்று ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்திய அரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி அருங்குணம், பூதூர், கே.கே.புதுர், கீழரமூர், ஓரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஒட்டக்கோவில், அத்திமனம், ஜானகிபுரம், வேடந்தாங்கல், அண்டவாக்கம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கா.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இன்று (ஜூலை.4) திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் அனைவரும் எம்.எல்.ஏ மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகளைப் பெற்றனர். இத்திருமணம் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
செங்கல்பட்டு இன்று (ஜூலை 04) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!
Sorry, no posts matched your criteria.