Chengalpattu

News March 9, 2025

வெப்ப நோயை தீர்க்கும் அக்னிபுரீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வலுவதுரில் பிரசித்திபெற்ற அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு 5 திங்கட்கிழமை வந்து நெய் தீபம் ஏற்றி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், குடும்ப பிரச்சனை, மனதளவில் ஏற்படும் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் சூப்பர் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் 126 பணியிடங்கள் சென்னையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8th, B.Sc, DMLT, M.Sc போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ.8,500- 21,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-03-2025. யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

image

காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். மறைமலைநகர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், உயிரிழந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி (28) என்பதும், போரூரில் தங்கி டெலிவரி பணியில் இருந்ததும் தெரியவந்தது.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2025

மனநோயை போகும் வேதகிரீஸ்வரர் திருக்கோவில்

image

செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய வேதகிரீஸ்வரர் திருக்கோவில். இங்கு சங்கு தீர்த்தம் எனும் புனித தீர்த்தம் உள்ளது. சித்தபிரமை மனநோயுடன் வாழ்பவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்.

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

முதலியார் குப்பம் படகு இல்லம்

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் இந்த படகு இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது.மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த படகு இல்லத்தில் பல வகையான படகு சவாரி,வாழைபழ படகு சவாரி,வட்டர் ஸ்கூட்டர்,விரைவு படகு சவாரி போன்றவை நடத்தப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள ஒதியூர் ஏரியில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது.ஓடியூர் ஏரியின் கடற்கரை தீவுக்கு மோட்டார் படகுப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.ஷேர்

News March 8, 2025

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு – மகன் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கருப்பேரி பகுதியில் தந்தை மற்றும் மகனை அரிவாலால் வெட்டி விட்டு இளைஞர் தப்பியோட்டம். தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். படு காயம் அடைந்த மகன் மகன் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரசிம்மன் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.

News March 7, 2025

திருமண தடை நீக்கும் சுயம்பு சிவகாளியம்மன்

image

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில், புகழ்பெற்ற சுயம்பு சிவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கல்யாணம் ஆகாத, குழந்தை இல்லாத பெண்கள், அம்மனுக்கு வளையல்களை அணிவித்து வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை நடைபெறும். திரளான பக்தர்கள் சுயம்பு சிவகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்து அம்மன் அருளை பெறுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!