Chengalpattu

News August 27, 2025

செங்கல்பட்டு காவல்துறையினரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மக்களுக்கான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பத்துடன் ஆனந்தமும், அமைதியும், செழிப்பும் நிறைந்த விழாவை கொண்டாட வேண்டும் என காவல்துறை வாழ்த்தியுள்ளது. விழாக்காலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

News August 27, 2025

செங்கல்பட்டு: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

News August 27, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் (26/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 26, 2025

மாற்றுத்திறனாளி போல் வேடமிட்ட இளம் ஜோடி கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இன்று (ஆக.26 ) மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டு சிக்னலில் பிச்சை எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரித்த தாம்பரம் போலீசாரிடம் இருந்து தலை தெறிக்க ஓடியவர்களை கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவன் மனைவி என்பதும் தெரியவந்தது.

News August 26, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டில் வரும் ஆக.30ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் 8th, பட்டப்படிப்பு மற்றும் BE, ITI, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27426020, 9384499848 எண்களில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

செங்கல்பட்டு: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி ரயில்வே அட்டவணையில் மாற்றம்

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு(செப்டம்பர் 27), சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய விடுமுறை தினம் என்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பயணிகள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News August 26, 2025

சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

image

துரைப்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (29) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி நசீமா பானு இத்தீர்ப்பை நேற்று வழங்கினார்.

News August 26, 2025

செங்கல்பட்டு: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு <<17520383>>இங்கே கிளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!