India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் அனிருதன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மார்.11) தனது வீட்டிலிருந்து கார் மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் ராட்டினகிணறு அருகே திமுகவினர் வழிமறித்து, காரை சேதப்படுத்தியதோடு அவரையும் தாக்கியுள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான 5 சுற்றுலாத் தளங்களை இப்போது பார்க்கலாம். 1. மாமல்லபுரம், 2.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 3. வண்டலூர் உயிரியல் பூங்கா, 4. தட்சிண சித்ரா, 5. முட்டுக்காடு. இங்க நீங்க விசிட் பண்ணிருக்கீங்களா?. இது தவிர வேறு என்ன இடம் இருக்குனு கமெண்ட் பண்ணிட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலகுமாரன் – வித்தியா தம்பதியர். நேற்று மாலை வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த அவரின் இரண்டு வயது பெண் குழந்தை ஆருத்ரா தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், வழக்கில் வெற்றபெற, சொத்துப்பிரச்சனையில் தீர்வு காண இங்கு வழிபாடு செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தபட்டது.விமானத்தை பழுது பார்க்கும் பணி நடப்பதால்,விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிப்பு.விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி,தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால்,விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு,168 பயணிகள் உட்பட178 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ரவி (45). தனது தம்பியின் மகன் காமேஷ் (23) மூலம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். அவரை தடுக்க முயன்ற நரசிம்மன் (70) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையான காமேஷ், சென்னேரி வனப்பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையில் இருந்து சென்னைக்கு 192 பயணிகளுடன் நேற்று (மார்.09) பகலில் வந்த விமானம்,தரையிறங்கும் போது வால் பகுதி ஓடு பாதையில் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது.அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் 192 நபர்களும் உயிர் தப்பினர்.விமான பாதுகாப்பு ஆணையம் இது குறித்து விசாரணை செய்து வருகிறது.வானில் பறக்க தகுதியானது என்று சான்று பெற்ற பிறகே விமானத்தை பயன்படுத்த வேண்டும் என் உத்தரவு. பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.