India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் கிராமத்தில், கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளம் உள்ளது.தற்போது அந்த பள்ளத்தில், தண்ணீர் நிரம்பி உள்ளது. இதில் நேற்று, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, பொது மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.97 லட்சம் கோடியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தில், 6,47,962 ரூபாயாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். செங்கல்பட்டை சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <
திருப்போரூர் அடுத்த கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் முணு ஆதி, 44, இவர் கடந்த 9 ம் தேதி இரவு 10:00 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டு ஏறும்போது தவறி கிழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச்.15) காலை உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.97 லட்சம் கோடியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தில், 6,47,962 ரூபாயாக உள்ளது.செங்கல்பட்டு மக்களே ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டம் காட்டூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபட்டால் அனைத்து திருமண தடைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், (செவ்வாய்) அங்கராகா தோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. ஒரு முறை இங்கு சென்று வழிபடுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்குபெற 17.03.2025 முதல் 21.03.2025 தேதிக்குள் அருகில் உள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது. யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
செங்கல்பட்டு மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யூர் அருகே செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாத்தியநாதன் (65), மாடு மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிச் செல்ல, அவரது ஆடைகள் சாலை ஓரமான கிணற்றில் காணப்பட்டதால், செய்யூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் தேடுதல் நடத்தியதில், அடுத்த நாள் (மார்ச்.14) காலை அவரது உடல் மீட்கப்பட்டது. செய்யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.