Chengalpattu

News March 20, 2025

திருமண வரம் தரும் திருவிடந்தை கல்யாணப்பெருமாள்

image

திருவிடந்தை கடற்கரை கிராமத்தில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். திருமணமாகாதவர்கள் மாலை வாங்கியணிந்து இக்கோயிலை 9 முறை சுற்றி வழிபட்டால் அவர்களுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்களால் கூறப்படுகிறது. திருமணமாகாத உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க!

News March 20, 2025

20,000 செங்கல்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு கேளம்பாக்கம் (OMR) பகுதியிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.03.2025 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 20,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>பதிவு செய்ய வேண்டும். 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9486870577/6383460933. அனுமதி முற்றிலும் இலவசம்.

News March 20, 2025

செங்கல்பட்டின் பெயர் காரணம் தெரியுமா?

image

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தது. எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி இப்பொழுது செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

News March 20, 2025

டேங்கர் லாரியில் மோதி மினி லாரி ஓட்டுநர் பலி

image

திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றி கொண்டு திருச்சியிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்துகொண்டிருந்தார். நேற்று அதிகாலை மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மினி லாரி மோதியது. இதில் மினி லாரி ஓட்டுனர் ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 19, 2025

நடிகர் விஜய் முகத்தில் கருப்பு மை பூசிய பெண்

image

கூடுவாஞ்சேரியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் உருவப்படம் சுவரில் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில், நள்ளிரவில் பைக்கில் வந்த ஒரு பெண், அந்த சுவரில் விஜய் முகத்தில் கருப்பு மை பூசி அழிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி தமிழக வெற்றி கழகத்தினர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 19, 2025

முன்னாள் எம்பி உதவியாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது

image

திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்த குமார் (72) கடந்த 16ஆம் தேதி தாம்பரம் செல்லும் போது மாயமானார். இதுகுறித்து தாம்பரம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை  விசாரணை மேற்கொண்டது. அதில், ரியல் எஸ்டேட் தொடர்பான விரோதம் காரணமாக ரவி என்பவர் தனது கூட்டாளிகளுடன் குமாரை கொலை செய்து, செஞ்சியில் புதைத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, போலீசார் ரவி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

News March 19, 2025

பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

image

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியருக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 19, 2025

8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .இந்த <>விண்ணப்பத்தை <<>>பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

News March 19, 2025

பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

News March 18, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம் இணைந்து மார்ச் 22 அன்று திருப்போரூரில் உள்ள இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. 200+ நிறுவனங்கள் பங்கேற்று, 20,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் உள்ளிட்டவர்கள் (18-40 வயது) கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு: 044-27426020. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!