Chengalpattu

News September 23, 2024

அமைச்சர் தலைமையில் நாளை குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் நாளை மாலை 03:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் புகார், கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 23, 2024

திருப்போரூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக கொலை

image

தையூர் அடுத்த செங்கண்மாலில் டிங்கர் கடையில் பணியாற்றி வந்த அப்துல் மஜீத்தை, கடந்த 5 நாட்களாக காணவில்லை என போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அவரது உடல், தையூர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. விசாரணையில், அப்துல் மஜீத்துக்கு, அவரது நண்பர் ஒருவருடன் பத்தாயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 8 பேர் கொண்ட கும்பல், அப்துல் மஜீத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

News September 23, 2024

355 மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட 355 மனுக்களை பெற்று, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த முகாமில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

News September 23, 2024

மதுவிலக்கு போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்

image

அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களப்பிரியாவின் கையெழுத்தை போலியாகவும், அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி சாராய வியாபாரியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்கவும் 2 போலீசார் முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சாய்பிரணீத், தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 23, 2024

கல்பாக்கம் அருகே கோர விபத்து: ஒருவர் பலி

image

கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், நெடுமரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய சதுரங்கப்பட்டினம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News September 23, 2024

விரட்டி விரட்டி கடித்த தெருநாய்கள்: 7 பேர் காயம்

image

செங்கல்பட்டு வளர்குன்றம் கிராமத்தில், கடந்த 2 நாட்களில் சாலையில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் ஜெயக்கொடி என்ற மூதாட்டியை கடித்துள்ளது. பின்னர், தெருவில் நடந்து சென்ற சிறுவன், பெண்கள் உள்ளிட்ட 7 பேரை நாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 23, 2024

வாக்கிங் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை!

image

புலிப்பாக்கம், காந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணனின் தலை மற்றும் முதுகு பகுதிகளில் சரமாரி வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார்? எதற்காக கொலை? முன்விரோதமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2024

பழுதான 12,943 மின் மீட்டர்களை மாற்றுவதில் அலட்சியம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,471 ஒருமுனை மற்றும் 11,472 மும்முனை மின் மீட்டர்கள் குறைபாடு உள்ளவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மாற்றித்தராமல், கடந்த ஆறு மாதங்களாக மின் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அதனால், சராசரி மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மின் வாரியத்திற்கு மட்டுமின்றி, நுகர்வோருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News September 22, 2024

புதிதாக 31 ஓட்டுச்சாவடிகள் உதயம்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு இறுதிப்படுத்துதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில் நடந்தது. புதிதாக 31 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டதால், 2,826 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அக்., 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என, கலெக்டர் தெரிவித்தார்.

News September 22, 2024

பரனூர் சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்தவர் கைது

image

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செப்.16ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, திருச்சி – சென்னை மார்க்கத்தில் உள்ள 4, 5, 6 ஆகிய சுங்கச்சாவடி பூத் கண்ணாடி உடைக்கப்பட்டன. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மமக மாவட்ட பொறுப்பாளர் ஆவடி மகத்கனி (32) என்பவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

error: Content is protected !!