Chengalpattu

News September 30, 2024

32 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக திருக்கழுக்குன்றம் வட்டத்தை சார்ந்த 32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணா சர்மா மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News September 30, 2024

சிறைக்காவலர்களை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு

image

சென்னையைச் சேர்ந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் (41) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். செப்.24ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த இவரை செங்கல்பட்டு சிறையில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் கோவைக்கு அனுப்பும் போது பணியில் இருந்த போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News September 30, 2024

செங்கல்பட்டு நகராட்சியுடன் இணையும் 15 ஊராட்சிகள்

image

செங்கல்பட்டு நகராட்சியில் அருகில் உள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: அஞ்சூர், குண்ணவாக்கம், வீராபுரம், தென்மேல்பாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், திருமணி, ஒழலூர், சிங்கப்பெருமாள் கோயில், செட்டிபுண்ணியம், பட்ரவாக்கம். இந்த ஊராட்சிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

News September 30, 2024

துணை முதல்வரான உதயநிதி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு, திருப்போரூர் பேரூர் திமுக சார்பில் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. திருப்போரூர் பேருந்து நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

News September 29, 2024

அரசு பள்ளியில் தீ விபத்து: புத்தகங்கள் எரிந்தன

image

சிங்கபெருமாள் கோயிலில் உள்ள அரசு பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் குடோன் உள்ளது. இதில், சுமார் 10 டன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை, புத்தகங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும் புகை வெளியேறியது. தகவல் அறிந்து வந்த தீயனைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் எரிந்தன.

News September 29, 2024

கலெக்டர் அலுவலகத்தில் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலக பகுதியில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

News September 29, 2024

அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனக்குச் சொந்தமான கல்லூரியின் விரிவாக்கத்திற்கு வங்கியில் ரூ.20 கோடி கடன் கேட்டுள்ளார். இதில், முறைகேடு நடந்ததாக சிபிஐ 2015ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நேற்று ரத்தானது.

News September 29, 2024

காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024

image

ஒத்திவாக்கத்தில், தமிழ்நாடு அதிதீவிர படை பள்ளி பயிற்சி மையத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் இன்று வரை ஆண்கள், மற்றும் பெண்களுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. 13 வகையான போட்டிகளில் 198 ஆண்கள் 8 அணிகளாகவும், 120 பெண்கள் 8 அணிகளாகவும், மொத்தம் 318 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெண்கள் பிரிவில் மேற்கு மண்டல அணி வென்றது.

News September 29, 2024

மாமல்லபுரத்தில் 500 கிலோ குட்கா கடத்திய 4 பேர் கைது

image

பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கார் மூலம் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரசன் குமார் (22), ஜீவாராம் (20), பேராராம் (37), கிமாராம் (22) ஆகியோரை மாமல்லபுரம் போலீஸார் எச்சூர் கூட்டு சாலையில் வாகன சோதனை பிடித்தனர். அவர்களிடமிருந்து 500 கிலோ குட்கா, ஒரு கார் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

News September 28, 2024

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு தர்மஅடி

image

கூடுவாஞ்சேரி நகராட்சி நெல்லிக்குப்பம் சாலை விஷ்ணுப்ரியா நகர் அருகே, நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை, பெற்றோர்கள் டூவீலரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குடி போதையில் டூவீலரில் வந்த ஒருவர், வாகனங்கள் மீது மோதியபடி சென்றார். இதில் மாணவரோடு டூவீலரில் சென்றவர் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தார்கள், அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!