Chengalpattu

News October 1, 2024

துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பரசன்

image

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News October 1, 2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 4 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 7ஆம் தேதி வழங்க வேண்டுமென நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 1, 2024

5,000 சிவப்பு காதுகள் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

image

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 சிவப்பு காதுகள் கொண்ட நட்சத்திர ஆமைகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலில் ஈடுபட பயணிகள் 2 பேரை, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்கின்றனர். மேலும், ஆமைகள் மலேசியாவிற்கு, விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டன.

News October 1, 2024

பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!

image

பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை, பட்ரோடு உணவகத்தில் பணியாற்றும் டொனாலி(30) என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோயம்பேடு தங்கும் விடுதியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின், கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்று, சங்கர்(24), ராஜேந்திரன்(45), சரண்(31), விஜய்(26) ஆகியோர் உடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.

News October 1, 2024

தசரா திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் 10 நாட்கள் தசரா விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழா வரும் 3ஆம் தேதி தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக, அனுமந்தபுத்தேரி பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

News October 1, 2024

மோசடி வழக்கு: இளைஞர் விமான நிலையத்தில் கைது

image

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் கபீர்(24). பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய இவர், தலைமறைவாக இருந்தார். இவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்து நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

News October 1, 2024

முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் அக்.4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11:30 மணிக்கு முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 1, 2024

புதிதாக உருவாகும் 2 நகராட்சிகள்

image

திருப்போரூர், கேளம்பாக்கம் 2 நகராட்சிகளாக உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்போரூர் பேரூராட்சியுடன் தண்டலம், ஆலத்தூர், தையூர், பையனூர் ஆகிய 4 ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்து முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்களின் எண்ணிக்கை 37,280 ஆக உயரும். கேளம்பாக்கம் ஊராட்சியுடன் படூர், புதுப்பாக்கம், நாவலூர், சிறுசேரி, தாழம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

News October 1, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில், வரும் அக்.16 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இப்போட்டியில், 6 – 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 1, 2024

திருக்குறள் முற்றேந்தல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு திருக்குறள் முற்றேந்தல் போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள், tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் அக்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27233969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!