India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டு மீனவர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த 37 பேர், மயிலாடுதுறை 13 பேர், ராமேஸ்வரம் 1, ஆகிய 51 மீனவர்கள், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 51 பேரையும் வரவேற்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 378 மக்கள் பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட அமைச்சர் அருண் ராஜ் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ளை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 290 இடங்களில் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டர் பொருத்தி தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறையில் மற்றும் வாட்ஸ்அப் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் மழை பாதிப்புகள் இருப்பின் 9944272345, 1077, 044-27427412, 044-27427414 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 390 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக 33 மீட்பு குழுக்கள், 290 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு அவசரநிலை தொடர்புக்கான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் செயல்படுகிறது. வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 18004254355, 18004251600-ஐ தொடர்புக் கொண்டு மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்கலாம். மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் புகார் அளிக்கலாம்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை செய்யூர் வட்டம் சித்தாமூரில் நடைபெறுகிறது. இதில், அரசு சார்பில் மக்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி கிடைத்திட உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நேற்று இரவு முதல் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் இடையே கேள்வி எழுந்தது. தற்போது, செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பிஸ்கட் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருங்கள். மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, குடிநீர், மருந்து மாத்திரைகள் சேமித்துக் கொள்ளுங்கள். கைபேசிகள், லேப்டாப், பவர் பேங்க் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு அளவில் தயாராகி உள்ளது. கனமழை பெய்யும் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு கட்சியினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தல். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநில, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.