India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், இலவச மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரே கல்லுாரியில் பாகுபாடு கூடாது என கூறி கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டில் நேற்று 3-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிறப்பு பென்சன், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலந்துார், மோரிசன், 3வது தெருவை சேர்ந்தவர் எட்வின் (49) கொத்தனார். கடந்த 29ம் தேதி, பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீனம்பாக்கம் பகுதியில், முன்னால் சென்ற காரை இடதுபுறமாக முந்த முயன்றபோது, அதே காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு இன்று (பிப்ரவரி-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

செங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <

செங்கை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

செங்கல்பட்டு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

வேளச்சேரியை அடுத்த பெரிய கோவிலம்பாக்கம், கே.பி.ஜி., நகரைச் சேர்ந்தவர் மாதவன் (70). இவர், நேற்று காலை எஸ்.கொளத்துார் பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். கோவிலம்பாக்கம் குளம் அருகே சென்ற போது, ரிவர்ஸில் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.
Sorry, no posts matched your criteria.