Chengalpattu

News October 15, 2024

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933, 8838893259 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

சராசரியாக 39.10 மில்லி மீட்டர் மழைப்பதிவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.14) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை பதிவான விவரம் (மி.மீ.): செங்கல்பட்டு 37, திருப்போரூர் 42.50, கேளம்பாக்கம் 28,60, திருக்கழுக்குன்றம் 42.40, மாமல்லபுரம் 63, மதுராந்தகம் 36, செய்யூர் 31, தாம்பரம் 32.30 என மொத்தம் 312.30 மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 39.10 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

செங்கல்பட்டிற்கு நாளை ரெட் அலர்ட்

image

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (16ஆம் தேதி) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 15, 2024

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுன் கனமழை

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலார்ட் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பெரும்பலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பொய்தது.

News October 15, 2024

மாற்றுத்திறனாளி தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை

image

தாழம்பூர் அருகே காரணை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(55). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் தனது வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 15, 2024

35ஆவது மாடியில் இருந்து விழுந்து கொரியா மாணவன் தற்கொலை

image

கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொரியன் நாட்டைச் சேர்ந்த யாங் கியூ லிம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 3:30 மணி அளவில் இவரது மகன் சினோ லிம் ( 15) என்பவர் 35வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் எழுதிய கடிதம் சிக்கியது.

News October 15, 2024

இலங்கை சிறையில் இருந்த 51 மீனவர்கள் சென்னை வந்தனர்

image

தமிழ்நாட்டு மீனவர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த 37 பேர், மயிலாடுதுறை 13 பேர், ராமேஸ்வரம் 1, ஆகிய 51 மீனவர்கள், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 51 பேரையும் வரவேற்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News October 15, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 378 மக்கள் பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட அமைச்சர் அருண் ராஜ் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 14, 2024

மாவட்டம் முழுவதும் 290 இடங்களில் தங்குவதற்கு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ளை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 290 இடங்களில் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டர் பொருத்தி தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

மழை பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறையில் மற்றும் வாட்ஸ்அப் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் மழை பாதிப்புகள் இருப்பின் 9944272345, 1077, 044-27427412, 044-27427414 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!