India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிடந்தை பகுதியில், நாளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக முதலமைச்சர் வர உள்ள நிலையில், ECR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து, போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி கல்பாக்கம், பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், வழியாக சென்னை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் நாளை பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருவிடந்தை ECR சாலையில் நடைபெறுகிறது. நாளை காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை சென்னை – புதுச்சேரி மற்றும் புதுச்சேரி – சென்னை மார்க்கங்களிலும் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கோவளம் – கேளம்பாக்கம் – சிறுசேரி – நாவலூர் – திருப்போரூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <

செங்கல்பட்டு: மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி தொடங்கியுள்ளது. நேற்று முதல் 18ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 1.30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா இன்று தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் உள்ளாட்சி தலைவர்கள் உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை யில் கட்டிட பணிக்காக எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு கனரக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் டிப்பர் லாரியின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் அன்பரசன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
Sorry, no posts matched your criteria.