India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பருவமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலைய பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று இரவு முதல் மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய பகுதி, சர்வதேச விமான நிலைய பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன. இது, விமான பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்ற விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.15) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை பதிவான விவரம் (மி.மீ.): செங்கல்பட்டு 32, திருப்போரூர் 59.50, கேளம்பாக்கம் 62.40, திருக்கழுக்குன்றம் 30.40, மாமல்லபுரம் 87, மதுராந்தகம் 31.70, செய்யூர் 13.10, தாம்பரம் 65.50 என மொத்தம் 381.60 மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 47.70 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரத்தில் அதிகபட்சமாக 87 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இதில், 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 51 ஏரிகள் 76%, 99 ஏரிகள் 51%, 172 ஏரிகள் 26%, 183 ஏரிகள் 25% நீர் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளை கண்காணிக்கும் பணியில், நீர்வளம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தொடங்கியதால், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து அதிகரிக்கும்.
பல்லாவரம் அடுத்த பொழிச்சலுாரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணிநேரம் போராடி பாம்பை பிடித்து கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களைப் பிடிக்க 044 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, பிரட், பிஸ்கட், தண்ணீர், மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர உதவி, புகார்கள் மற்றும் தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, தொலைபேசி : 044-2742 7412, 044-2742 7414, வாட்ஸ் அப்: +91 94442 72345 தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கனமழையை தொடர்ந்து இன்று வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. என்வே, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளது.
காரப்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் கருணாகரன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் சிறுக சிறுக நகையை திருடி வந்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேலை செய்யும் பெண் திருடியது உறுதியானது. பின்னர், அவரை கைது செய்த 60 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள்மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையின் அறிவித்துள்ளது. இதனால், மாமல்லபுரம், நெம்மேலி, கொக்கிலமேடு, கல்பாக்கம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் 2,500 பைபர் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறித்தனர்
தமிழகம் முழுவதும் வரும் 18ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையால் பாதிக்கப்படும்போது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடுவர். இதனை பயன்படுத்தி சிலர் பால் உள்ளிட்ட அத்தியாயத்தை உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.