Chengalpattu

News January 18, 2025

காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

பொங்கல் முடிந்து ஊர் திரும்பும் செங்கல்பட்டு மக்களுக்கு சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் திங்களன்று (ஜன20) காட்டாங்குள்த்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.00, 4.30,5.00, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்களும், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

News January 18, 2025

போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டுப்பாடுகள்

image

பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு – தாம்பரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, GST, OMR மற்றும் ECR சாலைகளில் வரும் 20ம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. GST சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 18, 2025

இன்றும் நாளையும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், 18.1.2025 மற்றும் 19.1 2025 ஆகிய தேதிகளில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகர், பொத்தேரி, மற்றும் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

News January 18, 2025

கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையை பயன்படுத்த தடை

image

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னை வர தொடங்கி உள்ளதால் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை ஜிஎஸ்டி சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்து வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி சென்னைக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் வழியாக சென்னை செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

கஞ்சா வியாபாரி கொலை; முக்கிய நபர் தலைமறைவு

image

காஞ்சிபுரம் களியப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றபோது, சிங்கப்பெருமாள்கோவிலைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணனை நேற்றுமுன்தினம் பிரவீன் தனது நண்பர்களுடன் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் <>விசாரித்து <<>>வருகின்றனர்.

News January 17, 2025

ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னையை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று (ஜன.16) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

News January 16, 2025

80 ஆயிரம் பேர் வண்டலூர் பூங்காவுக்கு வருகை புரிந்தனர்

image

பொங்கலை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 23 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும் கடந்த சனிக்கிழமை 11ஆம் தேதி முதல் இன்று வரை 80 ஆயிரம் பேர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 16, 2025

மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் வெள்ளம்

image

காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு ரசித்த பொதுமக்கள் அங்குள்ள கடற்கரையில் குவிந்தனர். கடற்கரை மண் தெரியாத அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழுகிறது. கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்து தடுப்பு அமைத்துள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் சிலர் தடுப்புகளை மீறி கடலில் நீராடி வருகின்றனர்.

News January 16, 2025

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்

image

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள், விமானம் மூலம் நேற்று (ஜன.15) இரவு சென்னை விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், விடுவிக்கப்பட்ட மீனவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

News January 16, 2025

12ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மர்ம மரணம்

image

உத்திரமேரூர் அருகே உள்ள ஏரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள், பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. முன்பகை காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

error: Content is protected !!