Chengalpattu

News January 23, 2025

செங்கல்பட்டில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன சுமார் 5000 காலி பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேலைநாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க. 

News January 23, 2025

மதுவிலக்கு வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் பொது ஏலம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர், மதுவிலக்கு வழக்குகளில் 26 பல்வேறு வகையான வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 49 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் அருகில் உள்ள ஐ.டி.ஐ., மைதானத்தில் வரும் 30ஆம் தேதி ஏலம் விடப்பட்ட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், வரும் 28-29ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பங்கேற்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

5 மணி நேரத்தில் 10 பேரிடம் செயின் பறிப்பு

image

5 மணி நேரத்தில் பெண் போலீஸ் உட்பட குறைந்தது 10 பேரிடம் 2 முகமூடி கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஓட்டேரி, பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயின் பறிப்பு நடந்துள்ளன. அதன் மதிப்பு 20 சவரன் ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2025

தனியார் நிறுவனத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

தாம்பரம் அழகேசன் தெருவில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜா (37) என்பவர் அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் இன்று ராஜாவை கைது செய்தனர்.

News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 22, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு சாரா அமைப்புகளில் மற்றும் பொது நிறுவனங்களில் சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று (22.01.2025) நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ராமேஷ், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

1 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி

image

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் அடுத்த மேலச்சேரி காவாங்கரை தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (28) – ஜாய்ஸ் (25) தம்பதி. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் ஒரு வயதுள்ள ஆண் குழந்தை அகஸ்டின் நேற்று முன்தினம் (ஜன.20) வீட்டின் வெளியே தெருக்குழாய் அருகே தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 22, 2025

சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சை

image

செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனை, கிளினிக்குகளில், சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நிமோனியா பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால், நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று தற்போது தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியாவால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்

News January 22, 2025

வறட்டு இருமல் அதிகரிப்பு

image

குளிர்காலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

News January 21, 2025

7 வயது சிறுமி பலாத்காரம்; ஆயுள் தண்டனை

image

காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முருகன் (39) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 2019-ல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

error: Content is protected !!