India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். மேலும் இவர் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், 22 வயது இளம்பெண்ணை காதலிப்பாக கூறி உல்லாசமாக இருந்து திருமணம் செய்ய மறுத்து வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் – 2025 போட்டி, சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ – மாணவியர் 3 பிரிவுகளில் பங்கேற்றனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பயர் டேக்வாண்டோ கிளப் சார்பில் 20 பேர் பங்கேற்றனர். இதில், 10 பேர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள், வரும் ஜூன் மாதம் லக்னோவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகினர்.
கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் சாதனாஸ்ரீ (17). தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட 50-52 கிலோ எடை பிரிவில் மாணவி கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், இவர் ஏற்கனவே தேசிய, பல்வேறு மாவட்ட அளவில் நடைபெற்ற ஏராளமான போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார்
செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம் நேற்று (பிப்.8) நடந்தது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொபைல் எண் சேர்த்தல் என 205 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன் அடைந்தனர்.
வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவரது நண்பா் கார்த்திகேயன், கடந்த 6ஆம் தேதி இரவு வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் கார்த்திகேயன் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கினார். அப்போது அங்கு வந்த நாகராஜ் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் மீதமிருந்த மதுவை அருந்தி வீட்டுக்குச் சென்று விட்டார். நாகராஜ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளில் உங்கள் தரவை ஹேக்கர்கள் எளிதாக இடைமறிக்க முடியும் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. பொது Wi-Fi பயன்படுத்தும்போது வங்கி அல்லது மின்னஞ்சல்கள் போன்ற முக்கியமான கணக்குகளை அனுகுவதைத் தவிர்க்கவும். இதன் மூலம், ஹேக்கர்கள் உங்கள் விவரங்களை திருட முடியும். அதன் மூலம் உங்களிடம் மோசடி செய்ய முடியும். எனவே, எச்சரிக்கையுடன் இருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தைப்பூசம் திருநாளை முன்னிட்டு 11ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கும் என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை பூங்காவுக்கு விடுமுறை தினமாகும். தைப்பூசம் என்பதால் பார்வையாக அதிகம் பேர் வருவார் என்பதால் பூங்கா திறந்திருக்கும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த தயாளன் (45), முத்தமிழ்ச்செல்வன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது தப்பி ஓடியதால், இருவருக்கும் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் வண்டலூர் மகளிர் போலீசார் நேற்று கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிப்.21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.