India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லியாஸ் தமிழரசனின் லீலைகள் குறித்து பதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, இந்த பெண் மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோக்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களிடமும் ஒரே வசனத்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, அதனை மறுத்ததோடு வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் லியாஸ் தமிழரசன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்தபோது, பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மற்றும் நகையை பெற்றது தெரியவந்தது. மேலும், பல பெண்களுடன் அவர் இருந்த வீடியோக்களும் அதில் அவரது செல்போனில் இருந்தது.
சென்னை, செம்பாக்கம் திருவிக நகரைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன், தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 2018 ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
சென்னையில், காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளரான லியாஸ் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், மேலும், பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நகை, பணத்தையும் பெற்றுள்ளார்.
காலி பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரியை, ஓட்டுநர் பழவேலி சாலையோரத்தில் ஓரங்கட்ட முயற்சித்துள்ளார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பீர்பாட்டில் ஏற்றிவந்த லாரியின்மீது வேகமாக மோதியது. இதில், சாலையோர பள்ளத்தில் உருண்டு 2 லாரிகளும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாழைப்பழத் தார்கள் நசுங்கி சேதமாகின. பீர்பாட்டில்கள் சாலையில் உருண்டு உடைந்து சிதறின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற (பிப்21) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 30க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் 1000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது 10th 12th
ஐடிஐ டிப்ளமோ டிகிரி இன்ஜினியரிங் போன்ற கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை கட்டாயம் சான்றிதழ் கொண்டு வரவும்
செங்கல்பட்டு மாவட்ட சார்-ஆட்சியராக பணிபுரிந்த வெ.ச.நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இன்று (பிப். 10 ) பிற்பகல் 12 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
செங்கல்பட்டு ஆட்சியராக உள்ள அருண்ராஜ் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார். இவருக்கும், மேகநாதன்-ஜெயந்தி தம்பதியரின் மகள் மருத்துவர் கௌசிகாவுக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலை 4.30- 6.00 க்குள் சுபமுகூர்த்த நேரத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆட்சியர் அருண்ராஜ்க்கும், கௌசிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாகவோ இதர வழிகளில் மது விற்பனை செய்தாலோ, உரிய சட்ட விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.