Ariyalur

News August 19, 2024

தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெண்குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, சாதனைபுரியும் 13 முதல் 18 வயசுத்திற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை விருது வழங்கப்படுகிறது. இதற்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 18, 2024

அரியலூரில் பண மோசடி – 2 பேர் கைது

image

அரியலூர் மாவட்டம் கீழசிந்தாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (64). இவரது 2வது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (34), கார்த்திகேயன் (37) ஆகியோர் ரூ.2.10 லட்சம் பெற்றுகொண்டு, 2 ஆண்டுகள் ஆகியும் வேலை பெற்று தரவில்லை. கார்த்திகேயன் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறியுள்ளார். முருகேசன் அளித்த புகாரின் படி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News August 17, 2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

அரியலூரில் ஒவ்வொரு ஆண்டும் பெண்குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு, சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று “தேசிய பெண் குழந்தை விருது” வழங்கப்படும். இதில் 1.00 இலட்சம் காசோலையும், பாராட்டு பத்திரமும் அடங்கும். தகுதியுடையோர் https://awards.tn.gov.in முகவரியில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

அரியலூர் கலெக்டர் அழைப்பு

image

அரியலூரில் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் போன்றவை மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விவரங்களுக்கு 0431 – 2460498, 2414177 எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

அரியலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில்

image

அரியலூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், செந்துறை வட்டத்தில் 21ம் தேதி காலை 9.00 மணிமுதல் 22ம் தேதி காலை 9.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
எனவே 20ம் தேதி வரை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை செந்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

அரியலூரில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் மூன்று தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தியை சரி பார்த்ததில் இது உண்மைக்கு மாறான செய்தி என தெரிய வந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டோம். பின்னர், செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவு

News August 16, 2024

அரியலூர் ரயில் நிலையத்தில் I ❤️ ARIYALUR

image

அரியலூர் ரயில் நிலையத்தின் முகப்பு வாயிலில் இன்று பயணிகளை கவரும் வகையில் I ❤️ ARIYALUR என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்ட மக்களின் ரயில் போக்குவரத்திற்கு முக்கிய இடமாக உள்ள நிலையில் தற்போது அதன் தரத்தை மேம்படுத்தும் வகையில் லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News August 16, 2024

அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்

image

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆக.02 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது .அதை ஈடு செய்யும் வகையில் நாளை (ஆக.17) அன்று அரசு வேலை நாட்களாக மாவட்ட நிர்வாகம் முன்னரே அறிவித்திருந்த நிலையில், நாளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இயங்கும்.

News August 16, 2024

அரியலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2024

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை

image

அரியலூர் மற்றும் செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.17) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், மருதூா், மருவத்தூா், நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் உள்ளிட்ட பிற கிராமங்களில் நாளை காலை 9 மணி மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!