India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட வேளாண்மை படிப்பு தோட்டக்கலை படிப்பு பட்டதாரிகளுக்காக, உழவர் நல சேவை மையம் தொடங்கப்பட்டது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் 12 உழவர் நல சேவை மையங்கள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதில் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள சுந்தரேசபுரம், சுத்தமல்லி, நடுவலூர், வெண்மான் கொண்டான் உள்ளிட்ட உழவர் நல சேவை மையங்களை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ அரியலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04329-223333
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள திருமலைசாமி என்பவரை 9360292682 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

ஆண்டிமடம் அடுத்துள்ள குவாகம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கிழக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் வைத்தி ஆலோசனையின்படி, நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுக்கூர் அருள், தேவனூர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுகவை கண்டித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

ஆண்டிமடம் அடுத்துள்ள குவாகம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கிழக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் வைத்தி ஆலோசனையின்படி, நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுக்கூர் அருள், தேவனூர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுகவை கண்டித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.