India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் 57 மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்ட இடைநிலை பள்ளி அலுவலராக பாலசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக நாமக்கல் தொடக்க பள்ளி அலுவலராக பணியாற்றியுள்ளார். மேலும், இடைநிலை பள்ளி அலுவலராக இருந்த நேசபிரபா திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 22ம் தேதி கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். மாற்றுத்திறனாளி தந்தை பிச்சை பிள்ளை அவரது மகள் ஆகியோர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 22ம் தேதி கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
அரியலூர் மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 2011க்கு முன் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ஆக.1 முதல் 31ஆம் தேதி வரை 6 மாத காலத்தில் கால நீட்டிப்பு செய்து www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
அரியலூர் பெரம்பலூர் சாலையில் சத்திரம் அருகே சாலையை கடக்க முயன்ற லட்சுமி என்ற பெண் மீது சௌந்தர் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லெட்சுமி படுகாயமடைந்தார் இதனையடுத்து லட்சுமி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அரியலூரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 51 கிலோ புகையிலை பொருட்களை மாவட்ட சுகாதார துறையினர் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறையினர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் படித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 23.08.2024 அன்று நடைபெறும் முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மற்றும் செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 மிலிமீட்டரும், செந்துறை பகுதியில் 1.2 மிலிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் 7.2 மிலிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.