India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூா் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இதில் லட்சம், நல்லனம் – ரூ.78.78 லட்சம், உட்கோட்டை- ரூ.1.21 கோடி, கல்லாத்தூா் -ரூ.1.26 கோடி, ரெட்டிதத்தூா் -ரூ.2.29 கோடி, அழகாபுரம் -ரூ.2.24 கோடி என மொத்தமாக ரூ.8.72 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை அந்தந்த கிராமங்களில் தொடக்கி வைத்தாா்.
உடையார்பாளையம் அடுத்த பரணம் அரசு பள்ளியின் மாணவி அபிநயா நீட் தேர்வில் 540 மார்க் எடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலுவதற்கு சேர்க்கை ஆணை பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் (7.5%) தேர்வாகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இருக்கின்ற அபிநயாவிற்கு ஆசிரியர்கள் சக மாணவ மாணவியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி செப்.5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2ஆம் பரிசு 3,000, 3ஆம் பரிசு ரூ.2,000 பரசு வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கலாம்.
அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், மானியத்துடனான மின்சார மோட்டாா் பம்ப் செட்டுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா். 3 ஏக்கா் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டாா் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது வாங்குவதற்கும் மானியமாக ரூ.15,000அல்லது மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரம், கீழக்குடியிருப்பை சேர்ந்த குணசேகரன் (Ex VAO) அவர்களின் மகன் கு.பிரபு (எ) பிரபாகரன் (மாவட்ட பிரதிநிதி) – ரா.பிரியதர்ஷினி ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று (24.08.2024) ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் .
இதில் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் உடனிருந்தார்.
தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கணினி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 23 மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் இன்று பூரண குணமடைந்தனர். இதனையடுத்து மாணவ, மாணவிகளை மருத்துவர்கள் செவிலியர்கள் உற்சாகத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறும்பன்சாவடியில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரத்த காயங்களுடன் ஒருவர் இருப்பதாக 108 கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த அழைப்பில், அங்கு சென்று 60 வயது முதியவருக்கு முதலுதவி செய்து அவரிடம் இருந்த சுமார் 42000 பணத்தையும், ஏடிஎம் கார்டையும் அவரிடம் ஒப்படைத்தனர். ஊழியர்கள் இலக்கியா, ராஜேஷ்க்கு பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரடியாக தொலைபேசி வாயிலாக திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார். கலைஞர் உரிமைத்தொகை பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலம் பேசி திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கைபேசிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.ரத்தினசாமி நேற்று வழங்கினார். விலையில்லா கைபேசி வேண்டி விண்ணப்பித்த 44 மாற்றுத்திறனாளி நபர்களில் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மூன்று மாற்று திறனாளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.