India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் 457 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இம்மனுக்கள் மீது சம்மந்தபட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது.
‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல்-உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேற பெயர்க்காரணம் தெரியுமா. C0MMENT பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ரத்தினசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரை அரியலூர் முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அமைச்சருக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசாக புத்தகத்தை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 7.5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி காலை 9 மணிக்கு அரியலூர் மாவட்ட அதிமுக சார்பாக அரியலூர் பழைய பேருந்து நிலையம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அரியலூரில் இன்று நடைபெறுகிறது. அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெறுகிறது.
அரியலூர் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள ஏரி தூர்வாரும் பணியில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியாளர்கள் எண்ணிக்கை, பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் வழங்கப்படும் முறை ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள் கூட்டம் ஜீலை.26 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விவசாய பிரதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை கோரிக்கை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர், ஆண்டிமடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகளின் நேரடி சேர்க்கைக்கு ஜூலை.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055877, 04329 -228408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.