Ariyalur

News September 6, 2024

அரியலூரில் டிஏபி உரத்திற்கு மாற்றாக புதிய உரம்

image

அரியலூர் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டி.ஏ.பி.உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு கூடுதல் சத்துக்கள் கொடுத்து அதிக மகசூல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் கூறினார்.

News September 6, 2024

புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் தொடங்கிவைப்பு

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம், தென்னூர் முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து வசதியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார். இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

அரியலூரில் UPSC தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்தேர்வு எழுத நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்தார.

News September 5, 2024

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் என்றால்www.sdat.tn.gov. in இணையதளத்தில் வரும் முப்பதாம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

அரியலூர்- தொழிற் பிரிவு பயிற்சி கட்டணம்

image

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மீதமுள்ள பயிற்சியாளருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. உரிய அசல் சான்றிதழுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி, +2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News September 5, 2024

அரியலூரில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம்- ரூ.50/-, தொழில்பிரிவு கட்டணம் ரூ.195ஆகும். மேலும் தகவல்களுக்கு அரியலூர் – 9499055877, 04329-228408, ஆண்டிமடம் – 9499055879 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெறும். அதன்படி நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்பி செல்வராஜ் தலைமையில் வாராந்திர சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 20 மனுதாரர்களிடம் மனுவைப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கைக்கு எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

News September 5, 2024

அரியலூர் பாலிடெக்னிக் கல்லூரி முக்கிய அறிவிப்பு

image

கீழப்பழூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் DCE, DME, DEEE, DECE, Diploma in Computer Engineering, Diploma in Agricultural Engineering உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இன்று மற்றும் நாளை நேரடியாக 2,263 ரூபாய் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

அரியலூர் மாவட்ட விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்க்கை

image

கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் civil engineering, mechanical engineering, EEE, ECE, CSE, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக கல்லூரியில் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என கல்லுரி முதல்வர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!