India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் சலவைத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. எனவே இதில் பயன் பெற விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள குரூப்-2 தேர்வு எழுதுபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யபட்டு உள்ளதாகவும், தேர்வு எழுதவரும் தேர்வர்கள், தேர்வாணையத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்ட காலத்திற்கு பின் வருகை தரும் தேர்வாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டு கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் அடுத்த குருவாயூர் கோவில் மெயின் ரோட்டில் அதிகாலையில் நேருக்கு நேர் லாரி மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே உள்ள வென்னம்கொண்டான் ஏரியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு வண்டல் மண் ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மண்ணை லாரியிலிருந்து கொட்டும் போது, லாரிக்கு அடியில் நின்று கொண்டிருந்த தரணி என்ற சிறுவன் தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமாக, பொது மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2,2ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ஆம் தேதி முற்பகல் காலை 9.30 மணிக்கு அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வட்டங்களிலும் 29 தேர்வு கூடங்களில் 8800 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஆசை தம்பி தெருவிலுள்ள ஒரு வீட்டில் நெகிழி பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று இரவு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அலுவலக பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 லட்ச மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
குணமங்கலம் அரசு பள்ளியில் பயிலும் வினிஷ், பவன்சரண், விஷாந்து, பிரத்தீஸ், குமாரவேல் ஆகியோர் நேற்று கள்ளிசெடியின் பாலை எடுத்து நாக்கில் தடவி சுவைப்பார்த்து, அதை ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று 2ஆவது நாளாக மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூரில் இன்று கத்தரி ரூ.42க்கும், தக்காளி ரூ.30க்கும், வெண்டை ரூ.26க்கும், அவரை ரூ.90க்கும், கொத்தவரை ரூ 34க்கும், முள்ளங்கி ரூ.36க்கும், பாகல் ரூ.38க்கும், பீர்க்கன் ரூ.38க்கும், சேனை ரூ.90க்கும், மாங்காய் ரூ.70க்கும், சி.வெங்காயம்-ரூ.30க்கும், பெ.வெங்காயம்-ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.76க்கும், கேரட் ரூ.66க்கும், பீட்ரூட் ரூ.34க்கும், உருளை ரூ.50க்கும் விற்பனை ஆகிறது.
Sorry, no posts matched your criteria.