India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மேலகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தவுத்தாய்குளம் சாலையில் உள்ள மதுக்கூடத்தில் தகராறு செய்து தன்னுடன் வந்த ஒருவரை, பாட்டிலை உடைத்து தாக்கியதோடு மதுக்கூட உரிமையாளரை தாக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் பரிந்துரைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.10.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலை பேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்தது.
அரியலூர் மாவட்டம், மேலகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி தவுத்தாய்குளம் சாலையில் உள்ள மதுக்கூடத்தில் தகராறு செய்து தன்னுடன் வந்த ஒருவரை, பாட்டிலை உடைத்து தாக்கியதோடு மதுக்கூட உரிமையாளரை தாக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்துள்ளார். இதனையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைப்பு.
தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்
அரியலூர் அருகே சுப்பராயபுரம் பகுதியில் ரயிலில் அடிப்பட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் சின்னவெண்மணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பது தெரிய வந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தீவிரம் காரணமாக ஏரி குளங்கள் ஆறுகள் முதலிய நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே குழந்தைகளை நீர் நிலைகளுக்கு விளையாட செல்ல அனுமதிக்காதீர்கள் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர்் அன்பழகன். அரசு போக்குவரத்து கழக மேலாளர் வாகனம் மோதியதில் பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்பாளையம் அடுத்த கச்சிப்பெருமாள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சாமுண்டி என்பவர் பைக்கில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நபர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதில் தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமம் நெடுஞ்சாலையில் ராங்கியம் கிராமத்தை சார்ந்த அன்பழகன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆண்டிமடத்திலிருந்து ராங்கியம் நோக்கி செல்லும் போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் மோதியதில் அன்பழகன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 33 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மின்வாரிய அதிகாரி தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது நடந்துள்ள இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.