India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம், தூத்தூர் அருகே கீழராமநல்லூர் கிராமத்தில் உள்ள அரியதங்கம் கோவில் அருகே மணல்திட்டு பகுதியில் நேற்று (டிச.23) மாலை 5.30 மணியிலிருந்து ராட்சத முதலை ஒன்று உலாவி வருவதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்கவே தீயணைப்பு வீரர்கள் முதலையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இன்று 23/12/2024 மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது சார்ந்த பிரச்சினைகளை மனு மூலம் அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தேசிய கால்நடைநோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் மணக்குடி கிராமத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் 73 விவசாயிகள் தங்களுடைய 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் கோமாரி நோய் பற்றியும், அதனை தடுப்பதற்கான முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை அரியலூரில் 10 மி.மீ.யும், திருமானூரில் 5.4 மி.மீ.யும், குருவாடியில் 11 மி.மீ.யும் மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 26.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரி மழையளவு 3.30 மி.மீ. பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் மழையை விட இந்தாண்டு டிசம்பர் மாதம் மழை அதிகமாக பெய்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமம் பெற ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கும் விரிவுப்படுத்துவதற்கும், பல்வகை உரிமங்கள் கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு WWW.TNSWP.COM என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் விளையும் பொருட்களான முந்திரி, முருங்கை, ஆய்த்த ஆடைகள், சிறுதானியங்கள் ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பான விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு, உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். ஷேர் செய்யவும்!
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தேவையற்ற எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஆதார் கார்டை வங்கி கணக்குடன் அப்டேட் செய்வதற்கு APK செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பெறுநர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் SBI இலிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்தி ஒரு மோசடி ஆகும் வங்கியை நேரில் அணுகி KYCஅப்டேட் செய்து கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறது.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஜெயகொண்டம் அடுத்த விழப்பள்ளத்தை சேர்ந்த குழந்தை தெரஸ்(37) என்பவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் நேற்று ஜெயகொண்டம் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டபோது, முகமது பைசத் & முகமதுஷாஜகான் என்பவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.