India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கால்நடை கணக்கெடுப்பின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனங்கள், நோய் தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை உற்பத்தி செய்ய இயலும். இயற்கை சீற்றங்களால், கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும் மீறி பாதிக்கப்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும், இக்கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்தார்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கை கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் அக்-30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீர்த்தங்கள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தின சாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் கைப்பேசி வாயிலாகவும், katseviadspvacariyalur@gmail.com அஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்தால், புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து ஏற்க மறுப்பதாக புகார்கள் வரப்பெற்று உள்ளது. எனவே வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வர்த்தகத்தின் போது பொதுமக்கள் தங்களிடமுள்ள 10 ரூபாய் நாணயத்தை அளிக்கும் பட்சத்தில் ஏற்க மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இதனை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
இரும்புலிகுறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்ச ஒழிப்பு ஏ டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் ரவி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத 5000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மனு கொடுக்க வந்த 14 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தாலோ, உதவி புரிந்தாலோ கடும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் ரத்தினசாமி எச்சிக்கை விடுத்துள்ளார். மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால், 24 மணி நேரமும் செயல்படும் குழந்தை பாதுகாப்பு உதவி மையத்தை 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஷேர் செய்யவும்
முழு மானி யத்தில் வழங்கப்படும் பூச்சி விரட்டிகளை வாங்கி வயல் வரப்புகளில் பயிடலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.நொச்சி மற்றும் ஆடாதொடா போன்ற பூச் சிவிரட்டிகளை மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் முழு மானிய விலையில் அரியலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 15,000 எண்கள் விநி யோகம் செய்யப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலர் சந்திக்கலாம்
Sorry, no posts matched your criteria.