India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து இன்று அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது கயர்லாபாத் கிராம ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது அரியலூர் புது மார்க்கெட் தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 05.11.2024 அன்று அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் போட்டோ- 6 ஆகியவற்றுடன் முகாமில் கலந் துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர் பெரம்பலூர் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கண்ணன் என்பது தெரிய வந்தது.
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருமானூர் கொள்ளிட பாலத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற இவர் யார் என்று தெரியவில்லை என்பதால் திருமானூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் திருமானூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரியலூர் – திருச்சி புறவழி சாலையில் அஜித் நகர் அருகே உயர்மின் அழுத்த மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக கார் மோதி மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மேலும் காரும் சேதமடைந்துள்ளது. இதனால் கூத்தூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் அரியலூரின் சில பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் கம்பத்தினை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHAREIT
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான நாளை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுக்கு பயின்று வருகின்றனர். தற்போது நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 13 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.