Ariyalur

News November 5, 2024

அரியலூர் வருகை புரியும் முக்கிய பிரமுகர்

image

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதியில் மாதபுரம், காட்டாத்தூர் போன்ற பகுதிகளில் இன்று (05.11.2014) நியாயவிலை கடை, புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் செந்துறை ஒன்றியத்தில் சமுதாய கட்டிடங்களையும் திறந்து வைக்க உள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 5, 2024

மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்

image

அரியலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 10ஆம் தேதி காலை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 4, 2024

அரியலூரில் இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு

image

கீழப்பழூரில் அமைந்துள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இன்று (04.11.2024) முதல் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தொழில் தொடங்குவதற்கு கடன் உதவிகளும் பெற்று தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 7539960190 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்களை பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.5 கோடிக்கு மது விற்பனை

image

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அரசாங்கத்தால் மது விற்பனை டாஸ்மாக் நடைபெற்று வருகிறது. இதில் பண்டிகை காலங்களில் அதிகப்படியான மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் (31-10-2024) தீபாவளியன்று ரூ.5 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாய்க்கு மது விற்பனை விற்பனை நடந்துள்ளது.

News November 2, 2024

அரியலூர்-கடன் வாங்கியவர் மீது தாக்குதல்

image

தா.பழூர்_ சுந்தரேசபுரம் சேர்ந்தவர் அன்புமணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம் 1 வருடத்திற்கு முன்பு 10000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் சசிகுமார், முருக பாண்டியன் செங்கமுத்து ஆகியோர் அன்புமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சசிகுமார் முருக பாண்டியன், செங்கமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

அரியலூர் அருகே கத்தியால் குத்தி ஒருவர் பலி

image

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்திக்கும் முன்விரோதம் காரணமாக கலியமூர்த்தி அவரது மகன்கள் சேர்ந்து சமுத்திரத்தை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சமுத்திரம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 2, 2024

அரியலூரில் ரூ.3,26,61,504 மதுபான விற்பனை

image

தீபாவளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 49 மதுபான கடைகளில் ரூ.3,26,61,504 மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுபானங்களின் விற்பனை அதிகம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2024

அரியலூரில் 5 பேர் கைது

image

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த தேவியுடன் கார்த்திக் என்பவர் பேசியது குறித்து தேவியின் அண்ணன் சமுத்திரம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் சிலர் சமுத்திரம் வீட்டிற்கு சென்று திட்டி கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், கலியமூர்த்தி, ஸ்ரீகாந்த், வாஞ்சிநாதன், கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.

News November 2, 2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மீனவர் சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயுத்த பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

இரும்புலிக்குறிச்சி அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

image

இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து இன்று அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது கயர்லாபாத் கிராம ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது அரியலூர் புது மார்க்கெட் தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!