Ariyalur

News November 20, 2024

கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 20, 2024

தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

அரியலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தை சேர்ந்தோர், இதற்கான விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் பெற்று நவம்பர் 26 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 19, 2024

201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 19, 2024

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

image

அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அங்கு பணியாற்றும் ராஜீவ்காந்தி என்ற இயற்பியல் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2024

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி

image

அரியலூர் சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மைய நிர்வாகி, வழக்குப் பணியாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இப்பணியிடத்திற்கு வருகிற டிச-03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 18, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

image

தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகாவினை தேர்வு செய்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நவ 20 மற்றும் 21 ஆம் தேதியில் அரியலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவிப்பு.

News November 18, 2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறந்த பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி அல்லது வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT.

News November 17, 2024

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

image

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால், பறிமுதல் செய்யப்பட்ட 46 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் 19.11.2024 அன்று காலை அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும், புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். ஷேர் செய்யவும்

News November 15, 2024

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: முதல்வர் தொடக்கம்

image

திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் வாயிலாக 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!